கார்தோம்,செப்.17 - சூடான் ஆயுதப் படைகளுக்கும் (SAF) துணை ராணுவ ஆதரவுப் படைகளுக்கும் (RSF) இடையி லான மோதல் துவங்கி செப்டம்பர் 15 ஆம் தேதியுடன் ஆறு மாத மாகிறது. இந்த ஆறு மாதத்தில் மட்டும் 53 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சாட், எகிப்து, எத்தி யோப்பியா மற்றும் தெற்கு சூடான் ஆகிய அண்டை நாடுகளுக்கு வாழ் வாதாரம் தேடிச் சென்றுள்ளனர். இதே வேளையில் 41 லட்சத்துக் கும் மேற்பட்ட மக்கள் உள்நாட்டில் 3,855 இடங்களுக்கு இடம் பெயர்ந்து ள்ளனர் என இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM) தெரிவித்துள்ளது. உள்நாட்டில் நைல் நதி, தெற்கு டார்பூர், கிழக்கு டார்பூர், வடக்கு மாநிலம், சென்னார் மற்றும் வடக்கு டார்பூர் ஆகிய ஆறு மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
2021 அக்டோபரில் இராணுவ சதியின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு பாதுகாப்புப் படைகளுக்கிடையே மோதல் வெடித்தது. இதற்கு முன்பே, சூடானின் உள்நாட்டுப் போரால் 32 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்தனர்.இந்த குழுக்களுக்கிடையிலான ஐந்து மாத மோதல் மட்டுமே சுமார் நாற்பது லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர காரணமாக அமைந்துள்ளது. தற்போது அந்நாட்டில் மொத்தம் 72 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். அதிகளவு உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் போரால் பாதிக்கப்பட்ட பிற நாடு களை ஒப்பிடும் போது சூடானில் 72 லட்சம் என்ற அளவில் அதிகள விலான மக்கள் இடம்பெயர்ந்துள்ள னர். இதற்கு அடுத்தபடியாக சிரி யாவில் 66 லட்சம் மக்களும், காங்கோ ஜனநாயகக் குடியரசில் 61 லட்சம் மக்களும் மற்றும் உக்ரை னில் 51 லட்சம் மக்களும் இடம் பெயர்ந்துள்ளனர் என ஐ.நா சபை தெரிவித்துள்ளது. 35 லட்சம் குழந்தைகளுடன் உலகளவில் உள்நாட்டில் அதிக எண்ணிக்கை யிலான இடம்பெயர்ந்த மக்களைக் கொண்ட நாடாக சூடான் உள்ளது என செப்டம்பர் 11 அன்று ‘சேவ் தி சில்ட்ரன்’ என்ற சர்வதேச அமைப்பு கூறியுள்ளது.