world

img

2 இந்திய இருமல் மருந்துகள் குறித்து உலக சுகாதார மையம் எச்சரிக்கை

இந்திய மருந்து நிறுவனத்தில் 2 இருமல் மருந்துகள் பயன்படுத்த வேண்டாம் என்று வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள மேரியன் பயோடெக் நிறுவனத்தின் 'டோக்-1 மேக்ஸ்' மற்றும் 'அம்ப்ரோனால்' ஆகிய இரு இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில் அளவுக்கு அதிகமாக எத்திலீன் கிளைக்கால் ரசாயனம் இருப்பதால், இரு மருந்துகளிலும் குழந்தைகளுக்கு உகந்ததல்ல என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.
உஸ்பெகிஸ்தானில் இந்திய நிறுவனத்தின் 'டோக்-1 மேக்ஸ்' இருமல் மருந்தை உட்கொண்டு, 21 குழந்தைகள் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 18 குழந்தைகள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதை அடுத்து, இம்மருந்தை அந்நாட்டு அரசு தடை செய்தது குறிப்பிடத்தக்கது.