world

img

75 நாடுகளில் 16,000 பேருக்கு குரங்கம்மை

கேரளத்தில் 3, தில்லியில் ஒருவருக்கு பாதிப்பு

ஜெனிவா, ஜுலை 24- பல்வேறு நாடுகளில் பரவி வரும் குரங்கு நோய் காரணமாக உலக சுகா தார நிறுவனம் உலகளாவிய சுகாதார  அவசர நிலையை அறிவித்துள்ளது.  கேரளத்தில் 3 பேருக்கு கண்ட றியப்பட்ட நிலையில் தில்லியில் ஒரு வருக்கு குரங்கம்மை நோய் இருப் பது கண்டறியப்பட்டுள்ளது. 75 நாடுகளைச் சேர்ந்த 16,000க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டு ஐந்து பேர் உயிரி ழந்துள்ளனர் என்று உலக சுகாதார நிறுவன டாக்டர் டெட்ரோஸ் அதா னோம் கெப்ரேயஸ் கூறினார். தடுப்  பூசிகளின் மேம்பாட்டை துரிதப் படுத்தவும், வைரஸ் பரவாமல் தடுக்க வும் உலகளாவிய சுகாதார அவசர நிலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள் ளது என்றார் அவர். ஒரு நோய் ஒரு தொற்றுநோயாக அறிவிக்கப்படு வதற்கு முன்பு உலகளாவிய சுகா தார அவசரநிலை அறிவிக்கப்படு கிறது. இந்தியாவில் முதன்முதலில் கேரளாவில் இந்நோய் உறுதி செய் யப்பட்டது. தற்போது மாநிலத்தில் 3 பேர் குரங்கு அம்மையால் பாதிக்கப்  பட்டுள்ளனர். மூவரும் வெளிநாட்டிலி ருந்து வந்தவர்கள். தில்லியில் ஒருவருக்கு குரங்கு  அம்மை நோய் பாதிப்பு இருப்பது  கண்டறியப்பட்டுள்ளது. இந்நோய் கண்டறியப்பட்ட முப்பத்தொரு வய துடையவருக்கு வெளிநாட்டுப் பயண பின்னணி இல்லை. அவர் மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். இதன் மூலம் நாட்டில் குரங்கு அம்மையால் பாதிக் கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்  காக உயர்ந்துள்ளது.