world

img

2050 க்குள் 77% புற்றுநோய் அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

2050-ஆம் ஆண்டுக்குள் உலகளவில் புதிதாக 3.5 கோடி பேர் (77%)  புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார அமைப்பின் புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் (IARC) எச்சரித்துள்ளது.
புற்றுநோய் குறித்து உலக சுகாதார அமைப்பின் IARC நிறுவனம் 115 நாடுகளில் ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டுள்ளது. 
புகையிலை, மதுப் பழக்கம், உடல் பருமன், காற்று மாசு, சுற்றுச்சூழல் ஆகியவை புற்றுநோய் வருவதற்கான முக்கிய காரணங்களாக உள்ளன. 
உலக நாடுகளில் கடந்த 2022ஆம் ஆண்டில் 10 வகையான புற்று நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 
நுரையீரல் புற்றுநோயானது உலகளவில் பொதுவாக ஏற்படும் புற்றுநோயாகும். கடந்த 2022ஆம் ஆண்டில் 2.5 கோடி  பேர் (12.4%) நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2ஆவது இடத்தில் இருக்கும் மார்பக புற்றுநோயால் 2.3 கோடி பேர் (11.6%) பாதிக்கப்பட்டுள்ளனர்.   
அதேபோல, பெருங்குடல் புற்றுநோய்க்கு 9.6% பேரும், வயிற்றுப் புற்றுநோய்க்கு 4.9% பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  
இதில், அதிகபட்சமாக 1.8 கோடி பேர் (18.7%) நுரையீரல் புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர். மேலும், மார்பக புற்றுநோயால் 6.9% பேரும், வயிற்றுப் புற்றுநோயால் 6.8% பேரும்,  பெருங்குடல் புற்றுநோயால் 9.3% பேரும் உயிரிழந்துள்ளனர். 
2022ஆம் ஆண்டின் பாதிப்புடன் ஒப்பிடுகையில் 2050ஆம் ஆண்டிற்குள் உலக நாடுகளில் 3.5 கோடி பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள். அதாவது, ஐந்து பேரில் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள். 
மனிதவள மேம்பாட்டுத் தொடர்பான தரவரிசையில் வளர்ந்த நாடுகளில் 142 சதவீதமும், நடுத்தர நாடுகளில் 99 சதவீதமும் பாதிப்பு ஏற்படும்.  2022 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட வழக்குகளை விட 77% அதிகமாக இருக்கும்.  2050ஆம் ஆண்டிற்குள் புற்றுநோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இருமடங்காக இருக்கும். 
புகையிலை, மதுப் பழக்கம், உடல் பருமன், காற்று மாசு, சுற்றுச்சூழல் பாதிப்பு போன்றவை முக்கிய காரணங்களாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.