சீனாவில் சிறு பொருளாதார மந்தநிலை ஏற்பட்டால் கூட அதன் காரணமாக உலகப் பொருளாதாரம் ஆபத்தில் செல்வ தாக மேற்கத்திய ஊடகங்கள் பிரச்சாரம் செய்யத் துவங்கி விடுகின்றன. சீனாவின் நிலை யான பொருளாதார வளர்ச்சி இன்றும் உலக ளாவிய பொருளாதார முன்னேற்றத்திற்கு இன்றி யமையாத ஒன்றாக இருந்து வருகிறது. இதே வேளையில் சீனா எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்க தீவிர நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங் வென்பின் தெரிவித்தார். 2023ஆம் ஆண்டின் முதல் பாதியில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 5.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.2022 ஆம் ஆண்டில் இருந்த 3 சதவிகித வளர்ச்சியை விட வேகமாக இருப்பதோடு கொரோனா தொற்று காலத்தையும் சேர்த்து கணக்கிட்டால் (2020-2022)பொருளாதார வளர்ச்சி சராசரியாக 4.5 சத விகிதமாக உள்ளதோடு இந்த ஆண்டின் 5.5சதவிகித வளர்ச்சி என்பது அமெரிக்காவின் வளர்ச்சியை விட மூன்று சதவீத புள்ளிகள் அதிகம். ஜூலை மாதம், சர்வதேச நிதியம் சீனா வின் பொருளாதாரம் 2023 இல் 5.2 சதவிகிதம் வளர்ச்சியடைந்து உலக பொருளாதார வளர்ச்சியில் மூன்றில் ஒரு பங்கிற்கு பங்கு வகிக்கும் என்று கணித்தது குறிப்பிடத்தக்கது. சீனாவின் நுகர்வு மற்றும் தொழில்துறை மேம்பாடு ஆகியவை பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.உதாரணமாக, இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சீனாவின் உள்நாட்டுத் தேவை அதன் பொருளாதார வளர்ச்சிக்கு 110.8 சதவிகிதம் பங்களிப்புச் செய்துள்ளது. ஒவ்வொரு வருடமும் 59.4 சதவிகித புள்ளிகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் நுகர்வு 46.4 சதவீத புள்ளிகள் அதிகரித்து 77.2 சதவீத பங்களிப்பை தருகின்றது.
தொழில்துறை வளர்ச்சிக்கு அடிப்படையாக , அறிவியல் ஆராய்ச்சி மற்றும் உயர் தொழில்நுட்ப தொழில்துறையில் ஆண்டுக்கு ஆண்டு 11.5 சதவீதம் முதலீடுகளை அரசு அதிகரித்துள்ளது என்றும் முதல் ஏழு மாதங்களில் தொழில்நுட்ப சேவைகளுக்காக செய்யப்பட்ட முதலீடு 23.1 சதவீதம் அதிகரித்துள்ளது எனவும் அமைச்சர் வாங் குறிப்பிட்டுள்ளார். சீனா உள்நாட்டில் உற்பத்தி செய்யும் மாற்று எரிசக்திகளான மின்சார வாகனங்கள், லித்தியம் பேட்டரிகள் மற்றும் சோலார் பேனல்கள் ஏற்றுமதி ஆண்டின் முதல் பாதியில் 61.6 சதவீதம் அதிகரித்துள்ளது, மேலும் சர்வதேசச் சந்தையில் சீனாவின் ஏற்றுமதியின் பங்கு ஜனவரி முதல் ஜூலை வரை இறக்கம் இன்றி நிலையாக உள்ளது என்றும் அதிக பணவீக்கம், நிலையற்ற நிதிச் சந்தை மற்றும் அதிகரித்து வரும் கடன் அழுத்தம் போன்ற பல சவால்களுக்கு மத்தியில் உலகப் பொருளாதார மீட்சி என்பது மந்தமாக உள்ளது என்றும், பொருளாதார வளர்ச்சிக்கு தற்போது காணப்படும் முடிவுகளுடன் பெருகி வரும் புதிய சவால்களை எதிர்கொள்ள சீனா தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேற்கத்திய ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகள் சீனா எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பற்றி மட்டும் விளம்பரப்படுத்து கின்றன அதே நேரத்தில் தனது பொருளாதார யுக்தி மூலம் சீனா மீண்டு வருவதை அவர்கள் மறைத்து விடுகின்றனர். உலகளவில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில், நுகர்வை அதிகரிப்பதற்காகவும், தனியார் பொருளாதாரத்தை ஆதரிப்பதற்காக, வணிகச் சூழலை மேம்படுத்துவதற்கும் பல்வேறு அம்சங்கள் உள்ளடங்கிய பரந்த அளவிலான நடவடிக்கைகளை சீன அரசு உருவாக்கியுள்ளது என சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங் வென்பின் தெரிவித்துள்ளார். இந்த வணிகச் சூழலை மேம்படுத்துவதற்காக சீன ஸ்டேட் கவுன்சில் மற்றும் அமைச்சரவை, ஆகஸ்ட் 13 ஞாயிற்றுக்கிழமை பன்னாட்டு முதலீட்டாளர்களுக்கு 24 அம்ச வழிகாட்டு தலை வெளியிட்டது. மறுதினம் சீன அதிகாரிகள் சீனாவில் அந்நிய முதலீட்டை அதிகரிப்பதற்கும், பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீட்டிற்கான கட்டுப்பாடுகளை தளர்த்து வதற்கும், முக்கியப் பகுதிகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான சந்தை அணுகலை விரிவுபடுத்துவதற்கும் புதிதாக வெளியிடப்பட்ட நடவடிக்கைகளை முழுமையாகச் செயல்படுத்து வதாக உறுதியளித்துள்ளனர். சீனாவின் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் (NDRC), சிறந்த பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, உள்நாட்டுச் சந்தையின் தேவையை அதிகப் படுத்துவதையும் உள்நாட்டு செலவினங்களைத் தூண்டுவதற்காக 20 நிர்வாக நடவடிக்கைகளை வெளியிட்டுள்ளது.மேலும் தனியார் முதலீட்டின் வளர்ச்சியைத் தூண்டுவதற்காக வழிமுறைகள் மற்றும் கொள்கைகளை மேம்படுத்த இருப்பதாகவும் கூறியுள்ளது.