பெய்ஜிங், டிச.19- சீனாவின் வடமேற்கு பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட தில் 100 க்கும் அதிகமான நபர்கள் பலியாகியுள்ள னர் என்றும் கிட்டத்தட்ட 400 பேர் படுகாயமடைந் துள்ளனர் என்றும் நிலநடுக்க நிவாரண தலைமை யகம் தெரிவித்துள்ளது.
சீன நிலநடுக்க கண்காணிப்பு மையத்தின் தக வல் படி, கன்சு மற்றும் குயிங்காய் மாகாணங்களில் இரவு 11:59 மணிக்கு 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலநடுக்கத்தை தொடர்ந்து அரு காமை மாகாணங்களான சின்ஜியாங் பகுதியில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் மையப்பகுதியான லியுகோ நகரமானது டோங்சியாங் மாகாணத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. குறைந்த ஆழத்தில் ஏற்படும் நிலநடுக்கங்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாக புவியியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
திபெத்- இமயமலைப் பகுதியை ஒட்டியுள்ள குயிங்காய் மாகாணத்தின் கண்டத் தட்டுகள் தொடர்ந்து நகர்வதால் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.
அரசாங்கத்தின் அதிகாரப் பூர்வ தகவல்களின் படி கன்சு பகுதியிலேயே அதிக அளவு உயிரி ழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஜிஷிஷான் பகுதியில் 6,381 வீடுகள் சேதமடைந்தன என்று மாகாண அவசர மேலாண்மைத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஹான் ஷுஜுன் தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கத்தால் சில கிராமப்புற சாலைகள் சேதமடைந்துள்ளன, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள் ளது மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளும் செயலிழந்துள்ளன.சேதமடைந்துள்ள உள்கட்ட மைப்புகளை சீரமைக்கும் பணியில் மீட்புப் படை யினர் ஈடுபட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மக்களை மீட்க 580 மீட்புப்படை வீரர் கள் 12 மோப்ப நாய்கள் அடங்கிய குழுவுடன் மாகா ணத்தில் உள்ள தீயணைப்பு துறையின் 88 தீய ணைப்பு வாகனங்கள் மற்றும் 10,000க்கும் மேற் பட்ட மீட்பு உபகரணங்களுடன் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் நிலநடுக்கம் பாதித்த பகுதியில் பாலங்கள் மாற்று சாலைகளின் பாதுகாப்பு தன்மை சோதிக்கப்பட்டு வருகிறது.இதனால் அப்பகுதியில் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், பிரதமர் லீ கியாங் ஆகியோர் மீட்பு பணிகளை தீவிரப்படுத்த வழி காட்டியுள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அத்துடன் மற்றொரு பேரழிவை தடுக்க மாகாண அதிகாரிகள் நிலநடுக்க நிலைமை மற்றும் வானிலை மாற்றங்க ளை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறார்கள்.