world

img

2023இல் 60 விண்வெளிப் பயணங்கள்

பெய்ஜிங், ஜன.11- 2023 ஆம் ஆண்டில் சுமார் 60 விண்வெளிப் பயணங்களை மேற்கொள்ள மக்கள் சீனம் திட்ட மிட்டுள்ளதாக அந்நாட்டின் விண்வெளி ஆய்வு மையங்கள் தெரிவித்துள்ளன. சீனாவின் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் ஆண்டறிக்கையில் இது பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்தக் கழகம் மட்டுமே 50க்கும் மேற்பட்ட விண்வெளிப் பயணங்களை மேற் கொள்ளவிருக்கிறது. இந்நிறு வனத்தின் ஆய்வு மற்றும் உற்பத்தி  மாநாடு தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய அனைவரும், கடந்த காலங் களில் எட்டிய சாதனைகள் வரும் ஆண்டுகளிலும் தொடரும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தனர். சீனாவில் அரசு நிறுவனமான விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம்தான் மிகப் பெரிய விண்வெளி ஆய்வு நிறுவன மாகும். சொந்தத் தொழில்நுட்பத் தின் மூலம் செயற்கைக் கோள் களை ஏவி வருகிறது. இதன் தயாரிப்பான லாங் மார்ச் ரக ராக்கெட்டுகள் பெரும் அளவில் வெற்றிகரமாக செயல்பட்டு வரு கின்றன. விண்வெளி ஆய்வு மற்றும்  செயல்பாடுகளில் சீனாவில் பெரும் முன்னேற்றத்திற்கு இந்தக் கழ கமும், அதில் பாடுபட்டு வரும் சீன விஞ்ஞானிகளும்தான் காரணம் என்று கூறப்படுகிறது.

நடப்பாண்டில் விண்வெளிக்கு கிட்டத்தட்ட 60 செயற்கைக்கோள்  களை ஏவத்திட்டமிட்டிருக்கிறார் கள். அதில் சீன விண்வெளி அறி வியல் மற்றும் தொழில்நுட்பக் கழ கம் மூலம் மட்டுமே சுமார் 50 செயற்கைக் கோள்களை ஏவப் போகின்றனர். மாநாட்டின்போது இது குறித்த ஆய்வறிக்கையை முன்வைத்து அக்கழகத்தின் பொது மேலாளர் ஜாங் ஜாங்கியாங் பேசி னார். மனிதர்கள் மற்றும் எந்திர மனி தர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டங்களும் இந்தப் பயணங் களில் அடங்கும் என்று அவர் தெரி வித்தார். இந்த 60 செயற்கைக் கோள் களை ஏவுவதைத் தாண்டி, டியான்வென் 2, சேஞ்ச் 7 உள்ளிட்ட  பல்வேறு விண்வெளி ஆய்வு நட வடிக்கைகளும் நடக்கவுள்ளன. மிக அதிகமான அளவில் விண்வெளி ஆய்வுகள், செயற்கைக் கோள்கள் ஏவுதல் உள்ளிட்டவை நடக்கும் ஆண்டாக 2023 இருக்கும் என்று இக்கழகத்தின் வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். 2022 ஆம் ஆண்டில் திட்டமிட்டதை விட அதிகமான அளவில் செயற்கைக் கோள்கள் ஏவப்பட்டன என்பதை சுட்டிக்காட்டும் அவர்கள், 2023 ஆம் ஆண்டிலும் இலக்கைத் தாண்டு வோம் என்று கூறுகிறார்கள். தனியார் துறையிலிருந்தும் நான்கு செயற்கைக் கோள்கள் ஏவப்பட்டன. ஆனால் அதில் இரண்டு தோல்வியைத் தழுவின. அரசு நிறுவனங்கள் பெரும் சாதனைகளைப் படைப்பவையாக உள்ளன. உருவத்தில் பெரும் அளவிலான ராக்கெட்டுகளைத் தயாரித்து அடுத்த கட்டத்திற்கு சீன நிறுவனங்கள் முன்னேறியுள்ளன. 

தொடங்கியது பணி

அறிவியல் பரிசோதனை களுக்கும், தொழில்நுட்ப சரிபார்ப்புக்கும் உதவக்கூடிய ஒரு செயற்கைக் கோளை ஜனவரி  11 ஆம் தேதியன்று சீனா ஏவி யிருக்கிறது. சீனாவின் செயற்கைக் கோள்களைத் தொடர்ந்து லாங் மார்ச் ரக ராக்கெட்டுகளை வைத்து  ஏவி வருகிறார்கள். இதில் லாங் மார்ச்-7 ரக ராக்கெட்டுகளை மேம்படு த்தியுள்ளனர். மேம்படுத்தப்பட்ட ராக்கெட் மூலம் ஷிஜியான்-23 என்ற செயற்கைக்கோள் ஏவப்பட்டிருக் கிறது.  விண்ணில் ஏவப்பட்ட இந்த  நிகழ்வு, சீனாவின் தீவு மாகாண மான ஹைனானின் வென்சாங் விண்கலம் ஏவுதளத்தில் நடந்தது.  காலையில் 6 மணிக்கு செலுத்தப் பட்ட இந்த செயற்கைக்கோள் திட்ட மிட்ட பாதையை வெற்றிகரமாக சென்றடைந்தது. சீனாவின் சொந்த  தயாரிப்பான லாங் மார்ச் ரக  ராக்கெட்கள் வாயிலாக செலுத்தப் பட்ட 459ஆவது செயற்கைக்கோள் இந்த ஷிஜியான்-23 என்பது குறிப்பிடத்தக்கதாகும்.