world

img

ஜி-20 உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் பங்கேற்பாரா?

பெய்ஜிங்: ஜி-20 அமைப்பின் 18 ஆவது உச்சி  மாநாடு இந்திய தலைநகர் தில்லியில் செப்டம்பர் 9,10 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. இம்மாநாட்டில் பங்கேற்க ஜி-20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள், பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இம்மாநாட் டில் நேரடியாக பங்கேற்கவில்லை என்றும், அந் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லவ்ரவ்  பங்கேற்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ மாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இந்தியாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்பது குறித்து இந்தியா மற்றும் சீன வெளியுறவு அமைச்சகங்களின் செய்தித் தொடர்பாளர்கள்  அதிகாரப்பூர்வமாக அறி விக்கவில்லை. சீன மக்கள் குடியரசின் பிரதமர் லீ கேகியாங் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் உச்சிமாநாட்டில் சீன ஜனாதிபதி கலந்து கொள்வார் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜின்பிங் பங்கேற்றால், உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளாக உள்ள சீனா மற்றும் அமெரிக்க ஜனாதி பதிகள் ஜி ஜின்பிங் - ஜோ பைடன் ஆகியோரின் சந்திப்பு இம்மாநாட்டின்  மிக முக்கிய அரசியல் நிகழ்வாக பார்க்கப்படும். இந்தோனேசியா பாலி தீவில் நடைபெற்ற 17-வது  உச்சி மாநாட்டில் இவர்கள் சந்திப்பு நடைபெற்றது.

பிரிக்ஸ் நாடுகளின் குரல் 

ஜி-20 உறுப்பு நாடுகளில் இந்தியா,பிரேசில், தென் ஆப்பிரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய பிரிக்ஸ் நாடுகளும் புதிய உறுப்பினர்களாக  இருக் கக்கூடிய அர்ஜென்டினா மற்றும் சவூதி அரே பியா ஆகிய 7 நாடுகளும் அங்கம் வகிக்கின்றன. மேற்குலக ஆதிக்கம் கொண்ட ஜி-20 கூட்டமைப் பில் பிரிக்ஸ் நாடுகளின் பலம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.