world

img

‘அமைதியை தரமாட்டோம்; கடைசி மனிதன் சாகும் வரை ஆயுதங்களை தருவோம்’

வாஷிங்டன் : தொடர்ந்து  500 நாட்களுக்கு மேலாக  நடந்து வரும் உக்ரைன் -ரஷ்யா போரால் உலகப் பொருளாதாரம் பெரும் பாதிப்பை எதிர்கொள்கிறது.  குறிப்பாக உக்ரைனிய மக்கள் அடிப்படைப் பொருளாதார பிரச்ச னைகளில் சிக்கியுள்ளனர். ரஷ்யா  உட்பட அனைத்து நாடுகளும் அமைதியான உலகப் பொருளா தார வர்த்தகத்திற்கு, இந்த போர் முடிவிற்கு வரவேண்டும் என்று கூறுகின்றன. ஆனால் அமெரிக்கா வும் அதன் நேட்டோ கூட்டாளி நாடு களும் இந்த போரை ஊக்குவிக்க அனைத்தையும் செய்து வரு கின்றனர். உக்ரைனை வைத்து ரஷ்ய பொருளாதாரத்தை சிதைக்க வேண்டும் என்ற வெறியுடன் இது வரை அமெரிக்கா 4,300 கோடி அமெரிக்கா டாலர் மதிப்பில் ஆயு தங்களை உக்ரைனுக்கு வழங்கி யுள்ளது. இந்நிலையில் இரண்டு நாள்  பயணமாக உக்ரைனுக்கு சென்ற  அமெரிக்க வெளியுறவு அமைச் சர் ஆண்டனி பிளிங்க்கன், ரஷ்யா வை எதிர்க்க உக்ரைனுக்கு மேலும் அதிக வலு தேவை என்றும் நட்பு நாடுகளின் பொருளாதாரத்தை அதிகரிக்க அனைத்து பணி களையும் அமெரிக்கா செய்யும் எனவும் கூறிவிட்டு, போர்ப் பதற் றத்தை தணியவிடக் கூடாது என்ற அமெரிக்காவின் ஆயுத அரசியலை நிலை நிறுத்துவதற் காக ‘கடைசி உக்ரனியன்  இருக்கும் வரை ஆயுத உதவி செய்வோம்’ என்று கூறியுள்ளார்.மேலும்  100 கோடி அமெரிக்க டாலர் அளவிற்கு ஆயுதங்கள் தர இருப்பதாகவும்  கூறியுள்ளார்.