கியூபா மீது விடுக்கப்பட்டுள்ள தடைகளை விலக்கக் கோரி உலகம் முழுவதும் மே 30 ஆம் தேதியன்று கோரிக்கைப் பேரணிகள் நடந்தன. 20 நாடுகளில் பல்வேறு நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று தடைகளை நீக்கக்கோரி முழக்கங்களை எழுப்பினர். ஸ்பெயினில் இருந்து லவ் யூ, கியூபா, பிரிட்ஜஸ் ஆப் லவ் மற்றும் விவா(வாழ்க) கியூபா ஆகிய முழக்கங்களோடு அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கப்பல் கிளம்பியது.