ஹவானா, ஏப்.20- நீர் வளத்தை முறையாகச் செலவழிக்க வும், அதைப் பராமரிக்கவும் உதவும் வகை யில் நவீனக் கருவிகளை கியூபாவுக்கு சீனா வழங்கியுள்ளது. தற்போது கியூபாவின் பல பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வறட்சியைச் சமாளிக்க நீர்வளக்கருவிகளை சீனா தந்து உதவியிருக்கிறது. அதோடு, வாகனங்கள், கோபுர வடிவிலான விளக்கு கள், சுமை ஏற்றிகள், இரும்பைப் பற்ற வைக்கும் எந்திரங்கள் உள்ளிட்ட கருவி களும் கிடைத்துள்ளன. கடுமையான தண்ணீர்ப் பிரச்சனையைச் சந்தித்து வரும் வேளையில், இது சரியான நேரத்தில் செய்யப்பட்ட உதவி என்று கியூப அரசு கூறியிருக்கிறது. மொத்தம் 449 கருவிகள் வழங்கப் பட்டன. இந்தக் கருவிகளை வழங்கும் நிகழ்ச்சி கியூபாவின் தலைநகர் ஹவா னாவில் நடைபெற்றது. இந்த விழாவில் கியூபாவின் துணைப் பிரதமர் இனெஸ் மரியா சாப்மேன், வெளிநாட்டு வர்த்த கம் மற்றும் முதலீட்டுக்கான துணைய மைச்சர் டெபோரா ரிவாஸ் மற்றும் சீனா வின் கியூபாவுக்கான தூதர் மா ஹுய் ஆகி யோர் பங்கேற்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் விநியோகத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்தக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன என்று மா ஹுய் தெரிவித்தார். தண்ணீர் விநியோகத்தை மேம் படுத்துதல், நீர் சேமிக்கப்படும் குழிகளைத் தூய்மைப்படுத்துதல், சாக்கடைகள் அடைக்காமல் பார்த்துக் கொள்ளுதல், அடைப்புகளை சிக்கலின்றி எடுத்து விடுதல் மற்றும் தூய்மைப் பணிகளைத் திறம்பட மேற்கொள்ளுதல் ஆகிய பணி களை இந்த நவீனக் கருவிகள் மேற் கொள்ளவிருக்கின்றன. சீனாவின் இந்தப் பங்களிப்புக்கு கியூபாவின் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக கியூப அரசின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான அண்டோ னியோ ரோட்ரிகஸ் தெரிவித்துள்ளார்.