world

img

நாம் இணைந்து பணியாற்ற வேண்டும்

கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜார் கொலையில் இந்தியாவின் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் குற்றம் சாட்டிய பிறகு இருநாட்டு உறவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் மற்றொரு  காலிஸ்தான் பிரிவினைவாதி  சுக்தூல் சிங்  சுட்டுக்கொல்லப்பட்டார் . இந்த குற்றச்சாட்டுகள் குறித்து சில வாரங்களுக்கு முன்பே இந்தியாவுடன் பகிர்ந்துள்ளோம். வளர்ந்து வரும் இந்தியாவுடன் நாங்கள் பிரச்சனைகளை அதிகரிக்க விரும்பவில்லை.நிஜார் கொலையில் உண்மையை வெளியே கொண்டு வர  இந்திய அரசு இணைந்து செயல்பட விரும்புகிறோம். இருநாடுகளும் தொடர்ந்து இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.  தற்போது அதிகரித்து வரும் பதற்றங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை எப்போதும் இல்லாத அளவிற்கு மோசமாக்கியுள்ளது .கனடா மக்களுக்கான விசாவை இந்தியா ரத்து செய்துள்ள நிலையில் இந்தியாவில் உள்ள  கனடா தூதரகத்தில் பணியாற்றும்  அதிக எண்ணிக்கையிலான கனடா அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் படி  இந்தியா கோரியுள்ளது.