ஒட்டாவா,பிப்.13- காசா, எகிப்து எல்லையான ரஃபாவில் இஸ்ரேல் ராணுவம் கடல், தரை மற்றும் வான் வழி என மும்முனைத் தாக்குதலை நடத்தி வரு கிறது. இதனால் உயிர் பிழைக்க பாதுகாப்பான இடம் என்பதே காசாவில் இல்லை என்ற சூழல் உருவாகியுள்ளது.
காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கான மருந்து உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களை இஸ்ரேல் ராணுவமும், சியோனிஸ்டுகளும் தடுத்து வருகின்றனர். இதனால் கடைசிப் புகலி டமாக இருக்கும் ரஃபாவில் கடுமையான செயற்கைப் பஞ்சம் உருவாகியுள்ளது.
சில தினங்களுக்கு முன் ஹமாஸ் முன் மொழிந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிராகரித்து ரஃபா எல்லையில் தாக்குதலை துவங்கியுள்ளது. இதற்கு பல நாடுகள் கடுமை யான கண்டனங்களை தெரிவித்து தாக்குதலை நிறுத்த வலியுறுத்தி வருகின்றன. இந்நிலை யில் கனடா அரசும் இந்த தாக்குதல் பேரழிவை ஏற்படுத்தும் என கருத்துக் கூறியுள்ளது. காசாவின் வடக்குப் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட 14 லட்சத்துக்கும் அதிக மான மக்கள் ரஃபாவில் தற்காலிகக் கூடாரங்க ளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.அவர்கள் மீதும் தாக்குதலை நடத்தப்போவதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அங்கு தரை வழி தாக்குதலை தொடுக்க ராணுவத்தை தயார்ப்படுத்தி வருகிறது.
இதனால் காசாவில் குறிப்பாக ரஃபாவில் என்ன நடக்கிறது என்பது குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன். இந்த நடவடிக்கை பாது காப்பு புகலிடம் தேடும் பாலஸ்தீனர்கள் அனை வருக்கும் பேரழிவை ஏற்படுத்தும் என கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் மெலனி ஜோலி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனர்கள் செல்ல இடமே இல்லாத போது ரஃபாவில் உள்ள மக்களை நேதன்யாகு அரசு மீண்டும் வெளியேற வற்புறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. வன்முறையை நிறுத்துவது தான் இப்போதைய தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நிரந்தரப் போர் நிறுத்தத்திற்கும் பணயக்கைதிகளை விடுவிக்கவும் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார். எனினும் இஸ்ரேல் பாலஸ்தீன போரில் கனடா அரசு அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் தொடர்ந்து ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.