ராணுவத் தேவைக்கான விமானங்களைக் கூட்டாகத் தயாரிப்பதற்கான உடன்பாட்டில் பிரேசிலும், போர்ச்சுகலும் கையெழுத்திட்டுள்ளன.
பிரேசிலின் எம்ப்ரேயர் மற்றும் போர்ச்சுகலின் ராணுவ விமான நிறுவனங்களுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. ஐரோப்பியப் பகுதியில் ராணுவ விமானங்களைத் தயாரிப்பது என்று இரு நாடுகளும் முடிவெடுத்துள்ளன. விமானத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையிலான இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா மற்றும் போர்ச்சுகல் ஜனாதிபதி அன்டோனியோ கோஸ்டா ஆகிய இருவரின் முன்னிலையில் இது கையெழுத்தாகியது.
இந்த ஒப்பந்தம் குறித்துப் பேசிய எம்ப்ரேயர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான ஜோவோ போஸ்கோ கோஸ்டா ஜூனியர், "ஏ-29 சூப்பர் டுகானோ ராணுவ விமானத்தை மேம்படுத்துவது மற்றும் தொழில்நுட்ப ரீதியான தொடர் முயற்சிகளில் முக்கியமான கட்டமாக இன்று கையெழுத்தாகியுள்ள இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இருக்கும். இந்த ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் இரு தரப்பும் ஆர்வமாக உள்ளது " என்றார்.
பிரேசில் ஜனாதிபதியாக இடதுசாரிக் கட்சித் தலைவர் லூலா பொறுப்பேற்ற பிறகு, உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் தங்கள் நாட்டிற்கு பலனளிக்கக்கூடியவையா என்ற வினாவை எழுப்பி நடைமுறைப்படுத்துப்படுத்துகின்றன. முந்தைய ஜனாதிபதி போல்சோனாரோ இருந்தபோது அமெரிக்காவின் ஆணைகள் மட்டுமே பிரேசிலின் கொள்கைகளாக மாறிக் கொண்டிருந்தன என்று அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.