world

img

உலகப் பொருளாதாரத்தில் அணுகுண்டை வீசும் இஸ்ரேல்-அமெரிக்கா

செங்கடல் வழியான கடல் போக்கு வரத்தை ஹவுதி அமைப்பு முடக்கி வருவதை மேலும் தீவிரமாக்கும் வகையி லான அமெரிக்க-இஸ்ரேலின் செயல்பாடு உலக பொருளாதாரத் தில் வீசப்படும் சிறிய அணுகுண்டு என கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

போர் அறிவித்ததில் இருந்து இஸ்ரேல் ராணுவம் காசா பகு தியில் கிட்டத்தட்ட 8 ஆயிரம் குழந்தை கள் உட்பட 18,500 க்கும் அதிக மான பாலஸ்தீனர்களை படு கொலை செய்துள்ளது. மேலும் அவர்களுக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்கள்,குடிநீர், மருந்துகள் ஆகியவற்றிற்கு தொடர் பற்றாக்குறையை இஸ்ரேல் ராணு வம் ஏற்படுத்தி வருகிறது. 

இந்நிலையில் இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்யும்  வரை செங்கடல் வழியாக இஸ்ரேல் தொடர்புடைய மற்றும் இஸ்ரேல் செல்லும் அனை த்து கப்பல்களை தாக்கி சிறைப் பிடிப்போம் என அறிவித்து தொ டர்ந்து கப்பல்களை   சிறைப்பிடித்து  வருகிறது  ஹவுதி அமைப்பு. அமெ ரிக்க ஆதரவுடன் இஸ்ரேல் நடத்தி வரும் போரை நிறுத்த பொருளா தார ரீதியிலான தாக்குதலே வழி வகுக்கும் என்பதால் இந்த தாக்கு தலை ஹவுதி முன்னெடுத்துள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதனால் வணிகக்கப்பல்கள் பல ஆயிரம் நாட்டிக்கல் மைல் தூரம் மாற்றுக் கடல் வழியில் செல்கின்றன.மேலும் செங்கடல் வழியாக பயணிக்கும் பல கப்பல்  நிறுவனங்கள்,  கண்டெயினர்க ளுக்கு வழக்கத்தை விட கட்ட ணத்தையும், காப்பீட்டுத் தொகை யையும் அதிகப்படுத்தியுள்ளன. 

தற்போது ஹவுதியின் பொரு ளாதாரத்  தாக்குதலால்  இஸ்ரேல் நாட்டை சேர்ந்த வணிகக்  கப்பல் நிறுவனங்களுக்கு 23 சதவீதம் வரை பொருளாதார  இழப்பு ஏற்பட்டு ள்ளது.அந்நாட்டின் இரண்டாவது பணக்காரரின் ஜிம் என்ற  கண் டெய்னர் வணிகக்  கப்பல் நிறுவன த்திற்கு 220 கோடி டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் மேலும் 200 கோடி டாலர்கள் இழப்பு ஏற்படும் என்றும் கூறியுள்ளன.இருப்பி னும் தங்கள் லாபத்தை குறைத்துக் கொள்ளக்  கூடாது என தங்களின் கண்டெய்னர்களுக்கு 100 முதல் 200 டாலர்கள் வரை கூடுதல் கட்டணம்  நிர்ணயம் செய்துள்ளது.

கடல் வர்த்தகத்தில் 63 சதவீத பங்கு வகிக்கும் தைவானை சேர்ந்த கண்டெய்னர் கப்பல் நிறுவனமான எவர் க்ரீன்  நிறுவனமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.பீபி என்ற இங்கிலாந்து நிறுவனம் உட்பட பல நிறுவனங்கள் செங்கடல் வழியான போக்குவரத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளன.

இந்நிலை மேலும் நீடிக்கும் பட்சத்தில் கச்சா எண்ணெய் மட்டு மின்றி அனைத்து வணிகப்  பொ ருட்களும் விலை உயரும் எனவும் இதனால் உலகம் முழுவதும்  பொருளாதார நெருக்கடி உருவாகும் அபாயம் உருவாகியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொருளாதார நெருக்கடி உருவாகாமல் தடுக்க இஸ்ரேல் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அனைத்து நாடு களும் வலியுறுத்தும் போதும் ஐ நா சபை வாக்கெடுப்பில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளாமல் அமெரிக்கா தனது ரத்து அதிகா ரத்தை பயன்படுத்தி   அந்த தீர்மா னங்களை தோற்கடித்து வருகிறது.

மறுபுறம் ஹவுதிகள் மீது தாக்குதல் நடத்த புதிய கப்பல் படை கூட்டணிக்கு சில நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.அத்துடன்  ஹவுதி அமைப்பு மீது தாக்குதல் நடத்த அரபு நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.

அமெரிக்கா-இஸ்ரேலின் இந்த நடவடிக்கைகள் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பதில் மத்திய கிழக்கு நாடுகளில் தீவிரமான  போரை தூண்டும் வகையில் உள்ளது. இது உலக பொருளாதாரத்தின் மீது வீசப்படும் அணுகுண்டு என  கடுமையான விமர்சனங்கள் எழுந்து வரு கின்றன.