world

img

ரஃபா எல்லையை முழுமையாக ஆக்கிரமித்த இஸ்ரேல் ராணுவம்

ரஃபா,மே.8- காசா - எகிப்து எல்லையான  ரஃபா  பகுதியை இஸ்ரேல் ராணுவம்   முழுமை யாக ஆக்கிரமித்து முடக்கியுள்ளது. பாலஸ் தீன மக்களுக்கு ஐ.நா வழங்கி வந்த நிவாரணப்பொருட்களையும் அவ்வழி யாக செல்லவிடாமல் தடுத்து வருகிறது. 

எகிப்து, கத்தார் ஆகிய நாடுகளின் போர் நிறுத்தப்  பேச்சுவார்த்தைக்கு ஹமாஸ் குழு ஒத்துழைப்பு கொடுத்த போதிலும், இஸ்ரேல் ஒத்துழைக்க மறுத்தது.   மறுதினமே  (மே 6 ) தரை வழித் தாக்குதலை துவங்கிய இஸ்ரேல் ராணுவம், ரஃபா எல்லையை  முழுமை யாக ஆக்கிரமித்து கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டுள்ளது.

பாலஸ்தீனர்களின் கடைசி புகலிட மாக உள்ள ரஃபாவில் தரைவழித்  தாக்கு தல் நடத்துவது மோசமான இனப்படு கொலையின் வடிவம் என உலகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. 

“ரஃபா எல்லை  மீதான ஆக்கிர மிப்பு முற்றுகையை நாங்கள் நிராகரிக் கிறோம்; அதே போல பாலஸ்தீன இறை யாண்மையைக் குறைமதிப்பிற்கு உட் படுத்தும் எந்த ஒரு முயற்சியையும் நிரா கரிக்கிறோம்” என பாலஸ்தீன விடுதலை அமைப்பின் பொதுச்செயலாளர் ஹுசைன் அல்-ஷேக்  தனது “எக்ஸ்” தளத்தில் தெரிவித்துள்ளார். 

தரைவழித் தாக்குதலை துவங்கிய  வுடன் இஸ்ரேல், சர்வதேச மனிதாபிமான சட்டத்தை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரி வித்துள்ளது. மேலும் 10 லட்சத்துக்கும் அதிக மான பாலஸ்தீனர்கள்  உள்ள பகுதியில் நடை பெறும் இந்த தாக்குதல்  நிலைமையை மேலும் மோசமாக்கும்; எனவே “சர்வதேச மனிதாபி மான சட்டத்தின் விதிகளை கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்து வதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மரியா ஜாகரோவா தெரிவித்துள்ளார். 

“இஸ்ரேலின் இந்த தரைவழித் தாக்குதல் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களுக்கு எதி ரானது” என  பிரிட்டனின் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்ட்ரூ மிட்செல் எச்சரித்துள்ளார். மேலும் “இஸ்ரேல் ராணுவம் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு போரை நடத்த வில்லை” எனவும், “தற்போது ரஃபா மீதான தரைவழி தாக்குதல், போரை முடிவுக்கு கொண்டு வராமல் மேலும் தீவிரப்படுத்தும்” என தெரிவித்துள்ளார்.  

“இஸ்ரேல் துவங்கியுள்ள மற்றொரு பேரழிவை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என கத்தார் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இஸ்ரேல் தரைவழித் தாக்குதலை துவங்கிய நிலையில் அந்நாட்டிற்கு  ஆயுதம் வழங்குவதை நிறுத்தியுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.   “பாலஸ்தீனர்கள்  மீதான இனப்படுகொலைக்கு ஆரம்பம் முதல்  ஆயிரக்கணக்கான கோடி டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கி வரும் அமெரிக்கா தற்போது ‘ஆயுதங்களை வழங்கவில்லை; பைடன் போரை நிறுத்த முயற்சிக்கிறார் என பேசு வது  மக்களை முட்டாளாக்கும் செயல்”  எனவு சமூக வலைத்தளத்தில் எதிர்ப்புகள்  கிளம்பியுள்ளன. 

இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலையில் தற்போது வரை 34 ஆயிரத்து  844 பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 78,404  பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகொலை  செய்யப்பட்டவர்களில் அதிக எண்ணிக்கை யிலானவர்கள் குழந்தைகள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.