world

img

தீக்கதிர் உலக செய்திகள்

ரம்ஜானுக்குள் கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் மிரட்டல் 

ரம்ஜானுக்குள் ஹமாஸ் வசம் உள்ள இஸ்ரேல் பணையக் கைதிகளை விடு விக்க வேண்டும் என இஸ்ரேல் மிரட்டல் விடுத் துள்ளது. இல்லை என்றால் பாலஸ்தீனர்க ளின் கடைசி புகலிடமாக உள்ள  ரஃபாவில் நடத்தி வரும் தாக்குதலை மேலும் தீவிரமாக்கு வோம் என மிரட்டியுள்ளது. சில தினங்களு க்கு முன் ஹமாஸ் முன்மொழிந்த போர் நிறுத்த  ஒப்பந்தத்தை இஸ்ரேல் அரசு நிராகரித் தது. இதுவரை 29,000க்கும் அதிகமான பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

உக்ரைனுக்கு சுவீடன் ராணுவ உதவி 

உக்ரைனுக்கு மிகப்பெரும் அள வில் ராணுவ உதவி செய்கிறது  சுவீடன். உக்ரைனுக்கு 6,820 கோடி டாலர்கள் மதிப்புள்ள ராணுவ உபகரணங்களை சுவீடன்  வழங்க உள்ளது என அந்நாட்டின் பாது காப்பு அமைச்சர் பால் ஜான்சன் அறிவித்துள் ளார். அதிநவீன போர்ப்படகுகள், கப்பல்க ளை தகர்க்கும் ஆயுதங்கள்என கடற்படைக்கு தேவையான ஆயுதங்களை இந்த தொகுப்பில் வழங்க உள்ளது. இந்த உதவி கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

கினியா இடைக்கால  அரசு கலைகிறது

கினியா இடைக்கால அரசு தற்காலி கமாக கலைக்கப்படுவதாக அறி விக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் இரண்டு வருடங்களுக்கு முன்  ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவம்  இடைக் கால அரசைக் கலைத்துவிட்டு புதிய அரசை  நிய மிப்பதாகக் கூறியுள்ளது.புதிய அரசாங்கம் அமைக்கப்படும் வரை அமைச்சரவையின் இயக்குநர்கள், பொதுச் செயலாளர்கள்பொ றுப்பில் இருப்பார்கள் என்றும் ராணுவத் தலை வர்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

எனது கருத்தில் உறுதியாக உள்ளேன் : லூலாஎனது கருத்தில் உறுதியாக உள்ளேன் : லூலா

இஸ்ரேலுக்கு  பிரேசில் இடதுசாரி ஜனாதிபதி லூலா   வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து இஸ்ரே லுக்கான தூதுவரை பிரேசில்  திரும்பப் பெற்றுக்கொண்டது. பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் இனப்படுகொலை செய்வதை ஹிட்லர் யூதர்களை படுகொலை செய்ததுடன் ஒப்பிட்டு பேசியதால் இஸ்ரேல் இந்த தடையை அறிவித்துள்ளது. ஆயினும் லூலா தனது கருத்தில் உறுதியாக இருப்பதாக அறி வித்துள்ளார்.

பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைகிறது வெனிசுலா 

பிரிக்ஸ் கூட்டமைப்பில் வெனிசுலா இணையப்போவதாக  தகவல் வெளி யாகியுள்ளது. போர்கள், பிற நாடுகளின் அரசியலில் தலையிடுவது, இனப்படு கொலைகள்  என  இருந்ததால்  பழைய கால னித்துவ உலக  முறை பிரிக்ஸ் கூட்டமைப் பால்   புதிய உலகமாக  மாற்றப்பட்டு வருவதாக வெனிசுலா  ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ சுட்டிக்காட்டியுள்ளார். அதனை தொடர்ந்து வெனிசுலா விரைவில் அக்கூட்டமைப்பின்  ஒரு பகுதியாக இருக்கும் எனவும் அறிவித்துள்ளார்.