world

img

தீக்கதிர் உலக செய்திகள்

குட்டரெஸ் மீதான தடைக்கு  ஈரான் கண்டனம் 

ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணியே குட்டரெஸ் மீது இஸ்ரேல் விதித்துள்ள தடைக்கு  ஈரான் கண்டனம்  தெரிவித்துள்ளது. இஸ்ரேல் செய்து வரும் போர் குற் றங்கள் குறித்து அவர் பேசாமல் மௌன மாக  இருக்க கட்டா யப்படுத்துவதை நோக்கமாகக் கொண் டது இது என்று ஈரான் வெளியுறத்துறை செய்தித் தொடர்பா ளர் இஸ்மாயில் பாகேய் தெரிவித்துள்ளார். இது ஐ.நா. மீதான மற்றொரு தாக்குதல் என ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜா ரிக்கும் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் அனுமதிக்காக காத்திருக்கும் உலக சுகாதார அமைப்பு 

அக்டோபர் 14 முதல் காசாவில் இரண்டாம் கட்ட போலியோ தடுப்பூசி போடுவதற்கு இஸ்ரேலிடம் அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளது உலக சுகாதார அமைப்பு.முதல் சுற்று மருந்து செலுத்தும் போது  கடைப்பிடிக்கப் பட்ட விதிகளை பின் பற்றியே இரண்டாம் கட்ட மருந்தையும் செலுத்த வேண்டும் அதற்கு அனுமதி கொடுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளது. சுகாதார நிலைமை மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையிலும் காசாவில் தினமும் தாக்குதல் நடத்துகிறது இஸ்ரேல்.

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில்  லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

ஆஸ்திரேலிய லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அதிரடி சோதனை யில் ஈடுபட்டுள்ளனர். வியாழனன்று இரவு தேசிய ஊழல் தடுப்பு ஆணைய  (என்ஏ சிசி) அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தியுள்ளனர். சோதனை தொடர் பான முழு தகவல்க ளையும் ஆணை யத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கவில்லை. இந்த சோதனையில் அரசியல் உள்நோக்கம் இல்லை எனவும் தற்போதைய மற்றும் முந்தைய நாடாளுமன்ற உறுப்பினர்களை குறி வைக்கவும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

தேடுதல் வேட்டை என்ற பெயரில் ஹமாஸ் தலைவர் கொலை

பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் துல்கர்மில் உள்ள ஹமாஸ் அமைப்பு பிரிவுகளின் ஒருங்கி ணைப்பு தலைவரான ஜாஹி யாசர் அப்துல் ரஸேக் ஓஃபியை படுகொலை செய்து விட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. தேடுதல் வேட்டை என்ற பெயரில் இஸ் ரேல் ராணுவம் ஒவ் வொரு நாளும் மேற்கு கரையில் பாலஸ்தீனர்களை படுகொலை செய்வதுடன்   மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவது, சிறையில் அடைத்து துன்புறுத்துவது என கொடுமைகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

சிரியாவில் உள்ள ரஷ்ய ஆயுதக் 
கிடங்கு மீது இஸ்ரேல் தாக்குதல்

டமாஸ்கஸ் : மேற்கு சிரியாவின் கடலோர நகரங்களில் உள்ள ராணுவத் தளங்கள் மீது  இஸ்ரேல் ராணுவம் தாக்கு தல் நடத்தியுள்ளது.  

அந்நகரில் அமைந்துள்ள ரஷ்யாவின் ஹ்மெய்மிம் விமான தளத்திற்கு அருகில் உள்ள சிரிய நகரமான ஜப்லே வில் தான் இஸ்ரேல் படைகள் மிகப்பெரிய அளவிலான வான் வழித் தாக்குதல்கள் நடத்தியுள்ளன.

சிரியா மற்றும் ரஷ்ய வான் பாதுகாப்புப் படைகள்  இணைந்து  இஸ்ரேலின் ஏவுகணைகளை இடைமறித்ததாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேலும் அங்குள்ள ரஷ்யாவின் ஆயுதக் கிடங்கை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளன.

இதனை தொடர்ந்து இஸ்ரேலில் உள்ள ரஷ்ய குடிமக்களை அந்நாட்டு அரசு வெளியேற அறிவுறுத்தியுள்ளது.