காட்டுத் தீ : தவிக்கும் கிரீஸ்
கிரீஸ் நாட்டில் பரவி வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த சர்வ தேச நாடுகளின் உதவியை நாடியுள்ளது அந்நாட்டு அரசு. இதற்காக ஐரோப்பிய நாடுகளிடம் தீயணைப்புப் பணிக்காக டேங்கர் ஹெலி காப்டர்கள், விமானங்கள் கொடுத்து உதவி வேண்டும் என அதிகாரிகள் கேட்டுள்ளதாக அந்நாட்டுத் தீயணைப்புத் துறை செய்தித் தொடர்பாளர் வாசிலியோஸ் வத்ரகோஜியா னிஸ் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே 700 தீயணைப்பு வீரர்கள் இந்த தீயணைப்புப் பணியில் ஈடு படுத்தப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தால் சூடானில் நிவாரணப்பணி தடை
வெள்ளத்தின் காரணமாக மனிதாபிமான உதவிகள் தடைபட்டதால் சூடான் நாட்டில் மக்கள் உண வின்றி பட்டினியில் கிடப்பதாக ஐ.நா அகதி கள் நிறுவனம் தெரிவித்துள்ளது. வெள்ளத் தின் காரணமாக நிவாரணப் பொருட்களை கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் அகதிகள் முகாமில் உள்ள சூடான் மக்களில் 11,000 க்கும் அதிகமானோர் பட்டினியில் இருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. உள்நாட்டு போர்க் காரணமாக அகதிகளான மக்களுக்கு இது இரட்டை பிரச்சனை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் நிறுத்தம் கொண்டுவர கூட்டறிக்கை
பாலஸ்தீனம் மீதான போரை நிறுத்த வேண்டு மெனவும் தடையின்றி மனிதாபிமானஉதவிகளை வழங்க வேண்டும் எனவும் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் ராணுவம் இதுவரை 39,000க்கும் அதிகமான பாலடஸ் தீனர்களை படுகொலைசெய்துள்ளது. இது காசா மக்களின் மொத்த மக்கள் தொகை யில் 1.7 சதவிகிதமாகும். அந்நாடுகளில் மக்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பெரும் போராட்டங்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது.