கிரீஸ் நாட்டில் பரவும் காட்டுத் தீ
கிரீஸ் நாட்டில் மிகப்பெரிய அளவில் காட்டுத்தீ பரவி வெப்பக்காற்று வீசி வருகிறது. இதனால் 4000 க்கும் அதிகமான மக்கள் தங்கும் இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 400 க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள், 79 தீயணைப்பு வாகனங்கள், 15 டேங்கர் விமானங்கள் ,11 டேங்கர் ஹெலிகாப்டர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளன. பலத்த காற்றின் காரணமாக கட்டுப்படுத்தும் பணி மிக கடினமாக உள்ளது என தெரி விக்கப்பட்டுள்ளது.
1.8 சதவீத பாலஸ்தீனர்களை கொலை செய்த இஸ்ரேல்
2023 அக்டோபர் மாதம் காசா மீது போர் தொ டுத்ததில் இருந்து 1.8 சதவீத பாலஸ்தீ னர்களை இஸ்ரேல் ராணுவம் படுகொலை செய்துள்ளது. பாலஸ்தீன மையப் புள்ளியி யல் பணியகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவ ரங்களின்படி இது தெரிய வந்துள்ளது. அது மட்டுமின்றி அதில் 24 சதவீதம் வரை யிலான நபர்கள் 18 - 29 வயதுடைய பாலஸ் தீன இளைஞர்கள் எனவும் தெரிவித்துள் ளது. மேலும் 50 சதவீதத்துக்கும் அதிகமான பள்ளிகளை குண்டு வீசி அழித்துள்ளது இஸ்ரேல் ராணுவம்.
ஈரானுக்கு மிரட்டல் விடும் அமெரிக்கா
எல்லை கடந்து ஈரான் மற்றும் லெபனானில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி ஹமாஸ் தலைவர்களை கொலைசெய்த பிறகு மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலை யில் ஈரானுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் ஏவுகணைகளை ஏவக்கூடிய விமானம் தாங்கிக் கப்பலையும், நீர்மூழ்கிக் கப்பலை யும் மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு அமெரிக்க ராணுவம் அனுப்பி வைத்துள்ளது. அமெ ரிக்கா மற்றும் இஸ்ரேல் பாதுகாப்புச் செயலாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த போர்க் கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.