world

img

தீக்கதிர் உலக செய்திகள்

காசாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு  அரபு அமீரகத்தில்  சிகிச்சை 

இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட, நோய்வாய்ப்பட்ட 85 பாலஸ்தீனர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. காசாவின் ஒட்டு மொத்த சுகாதார கட்டமைப்பையும் இஸ்ரேல் அழித்து விட்டது. தொற்றுநோய் மற்றும் உடல் உறுப்பு இழப்புகளை இழந்த லட்சக்கணக்கான பாலஸ்தீனர்கள் முறையான சிகிச்சை இன்றி துயரில் உள்ளனர். இந்நிலையில்  உலக சுகாதார நிறுவனம் சில நாடுகளை இணைத்து சிகிச்சையளிக்க முயற்சித்து வருகிறது. 

இஸ்ரேலுக்கு போரில் உதவ  அமெரிக்கா ‘உறுதி’

ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது முழு அளவிலான தாக்குதலை துவங்கி னால்   இஸ்ரேலுக்கு தேவையான  முழு பாது காப்பை அமெரிக்கா கொடுக்கும் என அமெ ரிக்க பாதுகாப்புத் துறை தலைவர் லாயிட் ஆஸ்டின் செய்தியாளர் சந்திப்பில் தெரி வித்துள்ளார். மத்திய கிழக்கில் அமைதியை உரு வாக்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆயுதங்கள், உளவுத் தகவல்கள் ஆகியவற்றை அமெரிக்கா தொடர்ந்து கொடுத்து போரை நீடித்து வருகிறது.

தொழிலாளர்கள்  பேரணி

வெனிசுலா  ஜனாதிபதி மதுரோவுக்கு ஆதரவாக லட்சக்கணக்கான தொழி லாளர்கள் பேரணி நடத்தியுள்ளனர்.  ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்ததால் தீவிர வலது சாரியினர் கிரிமினல் குழுக்களை இணைத்துக்  கொண்டு ஆட்சியை கவிழ்க்க கலவரத்தை உரு வாக்கினர். அந்த நடவடிக்கையை தடுத்த பிறகு இந்த பேரணி நடந்துள்ளது. கலவரங்களில் கைது செய்யப்பட்ட 70 சதவீதம் பேர் ஆயுதங் கள், போதைப்பொருள்  கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வடகொரியாவில் வெள்ளம்:  நேரில் ஆய்வு செய்த கிம் 

வடகொரியாவில் பெய்து வரும் கன மழையால் சினுய்ஜு, சீனாவின் எல்லை க்கு அருகிலுள்ள உய்ஜு கவுண்டி ஆகிய நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார்  4,000 க்கும் மேற்பட்ட வீடுகள், விவசாய நிலங்கள்  வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களை அந்நாட்டு தேசிய பேரிடர் மீட்புப் படை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளது. இந்நிலையில் மீட்புப் பணி களை வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் நேரில் சென்று பார்வையிட்டார்.

பாலஸ்தீனர்களை இஸ்ரேல் கொடுமை செய்தது : ஐ.நா. அறிக்கை    

இஸ்ரேல் ராணுவம் சிறையில் அடைத் துள்ள  பாலஸ்தீனர்களை கொடுமை செய்ததை ஐநா அறிக்கை உறுதி செய்துள் ளது. பாலஸ்தீனர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி யடித்தும், உடலில் மின்சாரத்தை பாய்ச்சியும், நாய்களை ஏவி கடிக்க  விட்டும் பல வகை களில் சித்ரவதை செய்துள்ளது. மேலும் சிறையில்  முறையான சிகிச்சை இல்லை எனவும்  ஐ.நா மனித உரிமைகள் அலுவல கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள் ளது.