லிபிய கடல் பகுதியில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாக 86 ஆப்பிரிக்கர்கள் அகதிகளாகச் சென்ற கப்பல் விபத்துக்குள்ளானதால் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 61 அகதிகள் நீரில் மூழ்கி இறந்துள்ளனர் என லிபியாவின் புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் பெரு ம்பாலும் நைஜீரியா, காம்பியா உள்ளிட்ட ஆப்பிரிக்கா நாடுகளை சார்ந்தவர்கள் என்றும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.