சீனா பிரதமர் லீ கேகியாங்கிற்கு பாகிஸ்தான் தற்காலிக பிரதமர் அன்வருல் ஹக் காக்கர் 200 கோடி டாலர் கடன் உதவி கேட்டு கடிதம் எழுதியுள்ளார். சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கிகளின் கடனால் திவாலான பாகிஸ்தானிற்கு 400கோடி டாலர்களை வைப்புத்தொகையாக சீனா கொடுத்து உதவியது. நாட்டின் மோசமான சூழலில் பொருளாதாரத்தை பாதுகாக்க சீனா அரசு உதவியதற்கு அன்வருல் நன்றியையும் தெரிவித்துள்ளார்.