பெய்ஜிங், ஏப்.20- 14ஆவது பெய்ஜிங் சர்வதேசத் திரைப்பட விழா ஏப்ரல் 18 வியா ழனன்று பெய்ஜிங்கில் துவங்கியது. இத்திரைப்பட விழா சீன ஊடகக் குழுமம் மற்றும் பெய்ஜிங் மாநகராட்சி யால் நடத்தப்படுகிறது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் குழுவின் பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும், சீன ஊடகக் குழுமத்தின் தலைவரும், இத்திரைப் பட விழாவின் அமைப்புக் குழுத் தலை வருமான ஷென் ஹாய்சிவுங் வியாழ னன்று நடைபெற்ற துவக்க விழாவில் பங்கேற்று உரைநிகழ்த்தினார்.
அவர் கூறுகையில், திரைப் படங்களின் மூலம், புதிய யுகத்தில் சீனாவின் கதைகளை நன்கு கூறி நாகரிகங்களுக்கிடையிலான பரி மாற்றத்தை முன்னேற்றி, மனிதகுலப் பொதுச் சமூகத்தின் கட்டுமானத்துக்கு ஆழ்ந்த பண்பாட்டுச் சக்தியைக் கொண்டு வர விரும்புவதாகத் தெரிவித்தார்.
9 நாட்கள் நடைபெறும் இந்த திரைப்பட விழாவில் பல நாடுகளைச் சேர்ந்த 4,273 திரைப்படங்கள் திரை யிடப்படவுள்ளன என்பது குறிப்பி டத்தக்கது.