ரஃபாவில் இஸ்ரேல் ராணுவம் நடத் தும் திட்டமிட்ட தாக்குதல் ஒரு அப்பட்டமான பேரழிவு செயல் முறை என பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது.10 லட்சத்திற்கும் அதிகமான பாலஸ்தீனர்களை காசா - எகிப்து எல்லையான ‘ரஃபா’ பகுதிக்கு வலுக்கட்டாய மாக துரத்தி அங்கும் தொடர் குண்டுவீசி வருகிறது இஸ்ரேல். இந்நிலையில் தரை வழித் தாக்குதலுக்கும் அந்நாடு தயாராகிவரும் நிலையில் இஸ்ரேலை ஐநா கண்டித்துள்ளது.