மாணவர்களின் கல்வியை பாதிக்கும் காலநிலை மாற்றம்
வெப்பம், காட்டுத்தீ, வெள்ளம், வறட்சி, நோய் தொற்று, கடல் மட்ட உயர்வு உள்ளிட்ட காலநிலை மாற்ற பிரச்சனைகளின் காரணமாக மாணவர்க ளின் கல்வி பாதிக்கப்படுவதாக உலகளாவிய கல்வி கண்காணிப்பு அறிக்கை (GEM) தெரிவித்துள்ளது. காலநிலை மாற்ற பிரச்னை களால் பள்ளிகள் அடிக்கடி மூடப்படுகிறது. இது அதிக கற்றல் ஏற்றத்தாழ்வுகளை உரு வாக்கும் எனவும் இதனால் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றன எனவும் எச்சரிக் கப்பட்டுள்ளது.
தாக்குதல்களை தீவிரப்படுத்துவோம் இஸ்ரேலுக்கு ஹவுதி எச்சரிக்கை
இஸ்ரேல் மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு எதிரான செங்கடல் தாக்குல்களை தீவிரப்படுத்தப் போவதாக ஏமனில் உள்ள ஹவுதி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தினமும் தீவிரப்படுத்தி வரும் நிலையில் இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பு மற்றும் காசா மீதான போரை நிறுத்தும் வரை தாக்குதல்களை தீவி ரப்படுத்துவோம் என ஹவுதி செய்தித் தொடர்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடுகளுடன் சமநிலை உறவு ஈரான் ஜனாதிபதி பேச்சு
ஈரானின் புதிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் “அனைத்து நாடுகளுடனான உறவுகளில் சமநிலையை” பேண உள்ளதாக தெரிவித்துள்ளார். தேசிய நலன்கள், அமை திக்கான தேவையை கருத்தில் கொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளதாகவும், எவ்வாறா யினும் அமெரிக்காவின் அழுத்தத்திற்கு தலை வணங்க மாட்டோம் எனவும் தெரிவித்துள் ளார். மேலும் தேர்தலின் போது தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தொடர்ந்து செயல்படுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.