world

img

அமெரிக்காவின் முடிவில் உக்ரைன் எதிர்காலம் : பொம்மை ஜனாதிபதி என்பதை காட்டும் ஜெலன்ஸ்கி

வாஷிங்டன்,செப்.23-   ரஷ்யாவுடனான இரண்டரை ஆண்டுகாலப் போரை முடிவுக்குக் கொண்டு வரும்  திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் கூறி உத்தரவு வாங்குவதற்காக  உக்ரைன்  ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்றுள் ளார். 

அந்த திட்டத்தை “வெற்றித் திட்டம்” என்று அழைத்துக்கொள்ளும்  ஜெலன்ஸ்கி தற்போ தைய ஜனாதிபதி ஜோ பைடனிடம் மட்டுமில் லாது, ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டி யிடும் கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்டு டிரம்ப் ஆகியோரிடமும் விவாதிக்க உள்ளார். 

உக்ரைன் - ரஷ்யா போரில் ஆயுதங்கள், தொழில்நுட்பங்கள் என அனைத்திற்கும்  முழு வதுமாக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடு களை மட்டுமே சார்ந்து இருக்கும் உக்ரைன் ஜனாதிபதி தன் நாட்டு மக்களின் தேவையை யும் கோரிக்கையையும் பற்றிக் கவலைப்படா மல் தனது முதலாளியான அமெரிக்க ஜனாதிபதி யின் உத்தரவுக்கு மட்டுமே செவி கொடுத்து வருகிறார்.   

போரை முடிவுக்குக் கொண்டு வர சீனா உட்பட பல நாடுகள் சர்வதேச அளவில் அமைதி பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருந்தும் உக்ரைன் அதற்கு முன்வரவில்லை.    

ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் பயங்கர தாக்குதல் நடத்தி அப்பகுதியை கைப்பற்றிய தாக உக்ரைன் காட்டிக்கொண்டாலும், உக்ரை னின் எல்லைக்குள் ரஷ்ய படைகள் முன்னேறு வதை அவர்களால் தடுக்க முடியவில்லை. தற் போது உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்யா அதிவேகமாக முன்னேறி வருகிறது. இந்த சூழ லில் தான் அமெரிக்காவின் கைப்பாவையான பொம்மை ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தனது அமெ ரிக்க முதலாளிகளை சந்திக்க சென்றுள்ளார்.   

ரஷ்யாவில் நீண்ட தூரத்தில் உள்ள இலக்குக ளைத் தாக்க நீண்ட தூர ஆயுதங்களைப் பயன் படுத்த அனுமதிக்குமாறு ஜெலன்ஸ்கி பல மாதங்களாக கெஞ்சி வருகிறார். அமெரிக்கா உட்பட எந்த மேற்கு நாடுகளும் இந்த கோரிக்கை யை பொருட்டாக மதிக்கவில்லை. இந்நிலை யில் தற்போதைய சந்திப்பில் இது குறித்து அவர்  பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமையன்றே அமெரிக்கா சென்று விட்ட அவர் பென்சில்வேனியாவில் உள்ள ஆயுத தொழிற்சாலைக்கு சென்று அங்குள்ள தொழிலா ளர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு இங்கு தான் ஜனநாயகம் உள்ளது என பதிவிட்டுள்ளார். 

மேலும் இந்த போரின் முடிவை வரும் வாரங் கள் தீர்மானிக்கும் என்றும்  குறிப்பிட்டுள்ளார்.