மனித நேயத்தின் அடிப்படையில் ரஷ்யா படைகளை திரும்ப பெற வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் கடும் நெருக்கடியை தொடர்ந்து இன்று உக்ரைன் மீது ரஷ்யப்படைகள் தாக்குதலை தொடுத்துள்ளது. இந்நிலையில் ரஷ்ய உக்ரைன் போரைத் தொடங்கி உள்ள நிலையில் உலக நாடுகள் பலவும் வருத்தம் தெரிவித்துள்ளன. இந்தியாவைப்பொறுத்த மட்டில் ரஷ்ய உக்ரைன் போரில் இந்தியா நடுநிலை வகிப்பதாக அதிகாரப்பூர்வமான தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையும் தனது கவலையை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், ரஷியா, தனது படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று புதினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மனிதநேயத்தின் அடிப்படையில் உக்ரைனில் உள்ள ரஷ்யப் படைகளைத் திரும்பப்பெற வேண்டும் என்று கூறிய அவர், இந்த மோதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.