world

நேட்டோ பயிற்சி உலகம் முழுவதும் போரைத் தூண்டும் : ஆய்வாளர்கள், இடதுசாரிகள் எச்சரிக்கை!

உக்ரைன் போர் துவங்கி இரண்டு  ஆண்டு முடிவடையும் நிலையில் போரை நிறுத்த ஒத்துழைக்க மறுத்து உக்ரைன் மற்றும் ரஷ்ய மக்களின் உயிரைப்  பறித்து வருகிறது அமெரிக்கா.   போர் முடிந்து விடாமல் இருக்க  அமெரிக்காவும்  நேட்டோ உறுப்பு நாடுகளும் உக்ரைனுக்கு ஆயு தங்களை வாரி வழங்கி வருகின்றன.  நேட்டோ நாடுகள் மூலம்  ரஷ்யாவை  அழித்து அதன் வளங்களைச்  சுரண்ட வேண்டும்  என்றே  போர் வெறியுடன் செயல்பட்டு வருகிறது அமெரிக்கா.

இதற்காக கடந்த மாதம்   நேட்டோ நாடுகளின் மிகப்பெரிய ராணுவ பயிற்சியை (Steadfast Defender 2024) துவங்கியது. நேட்டோவின்  31 உறுப்பு நாடுகளில் இருந்து  90,000 க்கும் அதிக மான  வீரர்கள், 50 போர்க்கப்பல்கள் மற்றும் பல போர் விமானங்கள்  ஜனவரி 22 அன்று  இந்தப் பயிற்சியை துவங்கின.இது ஐரோப்பாவில் நடை பெற்று வரும் மிகப்பெரிய போர்ப்  பயிற்சியாகும். இந்தப்   பயிற்சியை  2024 மே 31 வரை நீடிக்கத்  திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப்  பயிற்சி  ரஷ்யா அமைந்துள்ள கிழக்கு ஐரோப்பா மற்றும் வடக்கு ஆசியா கண்டம் முழுவதும் போர் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது.

ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொ டர்பாளர் மரியா ஜாகரோவா, நேட்டோவின்  பயிற்சி கள்  ஐரோப்பியக்  கண்டத்தில் ஆத்திரமூட்டும்,  சோக மான விளைவுகளை ஏற்படுத்தும் என எச்ச ரித்துள்ளார். மேலும் ஐரோப்பியக்  கண்டம் முழுவதிலும் இருந்து இதற்கான எதிர்ப்புக் குரல்களும் எச்ச ரிக்கைகளும் வருகின்றன. குறிப்பாக போர்  எதிர்ப்புக்  குழுக்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. உக்ரைன் போரைத்  தொடர்ந்து இந்த  போர்ப்  பயிற்சி ஐரோப்பா  முழு வதும் போரைத்  தூண்டும் அபாயம்  உள்ளதை போர்  எதிர்ப்புக்  குழுக்கள் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றன.   குறிப்பாக அமெரிக்கா , அதன் ஐரோப்பியக்  கூட்டாளி நாடுகள்  ஆதரவுடன் இஸ்ரேலால் நடத்தப்படும் பாலஸ்தீனர்கள் மீதான இனப்படு கொலை போருக்கு எதிரான எதிர்த்  தாக்குதல்கள் மத்தியக்  கிழக்கு  நாடுகளில் விரிவான போரை ஏற்படுத்தும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா மற்றொரு முனையில் நடத்தி வரும் இந்த போர்ப் பயிற்சி  உலகம் முழுவதும் பல பொருளாதார நெருக்கடிகளையும் அப்பாவி மக்களின் உயிரிழப்புகளையும் அதிக ரிக்கும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள், பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.  சுவீடன் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகள், தங்கள் நாட்டுவீரர்கள் நேட்டோ பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதற்கு கடு மையான கண்டனங்களையும் எதிர்ப்பையும் தெரி வித்துள்ளன.மேலும் எல்லா ஏகாதிபத்தியக்  கூட்ட ணிக்கு  எதிராகப்  போராடுவதைப் போலத்தான் இதற்கு எதிராகவும் போராடுகிறோம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.     ரஷ்யாவுடனான போரில் அணு ஆயுதத்தை பயன்படுத்தும் திட்டத்தை நேட்டோ கொண்டுள் ளது.

அதற்காக தான் எப்-35  போர் விமானங்க ளையும்,  தானாக இலக்கை தாக்கும் பி61-12 அணு குண்டுகளையும் அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கியது என அணு ஆயுதக் குறைப்பு  பிரச்சார அமைப்பின்  (CND) பொதுச் செயலாளர் கேட் ஹட்சன், ஜனவரியில் எச்சரித்திருந்தார். “மத்தியக்  கிழக்கில் அதிகரித்து வரும் போர்ச் சூழல்  மற்றும் உக்ரைனில் தொடர்ந்து வரும் போர் ஆகியவற்றை நிறுத்த ஒத்துழைக்காமல் மேலும் போரை விரிவாக்க அனைத்து சாத்தியங்களையும் அமெரிக்கா செய்துவருகிறது.மேலும் பதற்றத்தை அதிகரிக்க நேட்டோ மூலம் போர்ப்  பயிற்சிகளை நடத்துகிறது. இதில் ஏதேனும் ஒரு போர் அணு குண்டு பயன்பாட்டை கொண்டு வந்து விடும்.அதற்கு முன் இந்த போரை நிறுத்த வேண்டுமென அவர்  வலியுறுத்தினார்.