world

img

உக்ரைன் கீவ் நகரிலிருந்து மாணவர்கள் இன்றே வெளியேற இந்திய தூதரகம் உத்தரவு

உக்ரைன் தலைநகர் கீவ்லிருந்து இந்திய மாணவர்கள் இன்றே வெளியேற வேண்டும் என அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் உத்தரவிட்டுள்ளது. 
ரஷ்யா உக்ரைன் இடையே நடந்து வரும் போர் இன்று 6வது நாளாக தொடர்கிறது. இதனால் உக்ரைனில் உள்ள இந்தியர்களையும், மாணவர்களையும் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்விலிருந்து இந்தியர்கள் மற்றும் மாணவர்கள் உடனடியாக இன்றே ரயில் உள்ளிட்ட கிடைக்கும் வாகனங்கள் மூலம் வெளியேற வேண்டும் என்று அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் உத்தரவிட்டுள்ளது. 
ஏற்கனவே உக்ரைன் தலைநகர் கீவ்வில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்கு கீழ் வந்துள்ளதாகவும், அரசு கட்டங்கள் மட்டுமே எஞ்சி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  இந்நிலையில் தற்போது உக்ரைனின் கார்கிவ் நகரில் அரசுக் கட்டங்களை குறிவைத்து ரஷ்யப்படையினர் ஏவுகணை தாக்குதலை தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அடுத்தகட்டமாக கீவ் நகரிலும் தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.