கெர்மன்,ஜன.4- ஈரானின் கெர்மன் நகரில்அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டு குண்டுவெடிப்பு களில் 103 பேர் படுகொலையாகியுள்ள னர். 188 பேர் படுகாயமடைந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 2020 ஜனவரி 3 அன்று இராக்கில் அமெரிக்க அரசு ஈரானின் ஜெனரல் காசிம் சுலைமானியை படுகொலை செய்தது. அவரது நான்காம் ஆண்டு நினைவு தின நிகழ்வின் போது அவரது சமாதியில் நடத்தப்பட்ட இந்த குண்டு வெடிப்பு பெரும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் உளவுத்துறையால் அத்துமீறி ஹமாஸ் அரசியல் தலைவர் படு கொலை செய்யப்பட்ட மறுதினம் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இந்த பின்னணி யில் இந்த பயங்கரவாதத் தாக்குதல் களை அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் உளவுத்துறை அமைப்புகள் மேற்கொண்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
அமெரிக்காவால் உருவாக்கப்பட்டு அவர்களின் பண உதவியில் செயல்பட்டு வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பல பயங்கரவாத தாக்குதல்களை மத்திய கிழக்கு நாடுகளில் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமெ ரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் இந்த தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளாமல் மறுப்பு தெரிவித்துள்ளன.
ஈரானின் உளவுத்துறை அமைச்சகம், கடந்த ஜூலை மாதமே கெர்மன் உள்ளிட்ட ஈரான் நகரங்களில் பயங்கர வாதத் தாக்குதல்களை நடத்த இஸ்ரேலின் மொசாட் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற அமைப்புகளின் திட்டத்தை முறி யடித்ததாக தெரிவித்திருந்தது. இந்நிலை யில் இந்த தாக்குதல் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு ஹவுதி குழுவினர் 10 பேரை அமெரிக்க கப்பல் படை கொலை செய்தது.அடுத்த சில தினங்களிலேயே லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் எச்சரிக்கையை மீறி அந்நாட்டு தலைநகரில் குண்டு வீசி ஹமாஸ் தலைவரை இஸ்ரேல் கொலை செய்தது.
தற்போது ஈரானில் சுலைமானி சமாதியில் நடந்த குண்டு வெடிப்பு இவை அனைத்தும், இஸ்ரேல்- பாலஸ்தீன் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு பதிலாக அமெரிக்காவும் இஸ்ரேலும் மத்திய கிழக்கு பகுதியில் போரை மேலும் விரிவுபடுத்தும் வேலையை செய்து வருவதையே காட்டுகிறது என விமர் சனங்கள் எழுந்து வருகின்றன.