அமைதிக்கான நோபல் பரிசு வென்ற ஈரானைச் சேர்ந்த நர்கஸ் முகமதி, கட்டாய ஹிஜாப் சட்டத்திற்கு எதிராக போராடியதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள போதிலும் அரசின் அடக்குமுறைக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கி யுள்ளார். இதயம் மற்றும் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அவர், தனக்கு மருத்துவ உதவி தேவையில்லை என்று மறுத்து விட்டார்.