world

img

ஈராக் மருத்துவமனையில் கொரோனா வார்டில் தீ விபத்து - 54 பேர் உயிரிழப்பு

ஈராக் மருத்துவமனையில் கொரோனா வார்டில் ஏற்பட்ட தீ விபத்தில்  54 பேர் உயிரிழந்துள்ளனர், 67 பேர் காயமடைந்துள்ளனர்.

ஈராக்கின் தெற்கு மாகாணம் தி குவாரில் நசிரியா நகரில் இமாம் உசைன் என்ற மருத்துவமனை உள்ளது.  இதில், கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க வசதியாகத் தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வார்டில், ஆக்சிஜன் டாங்குகள் திடீரென வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தீ விபத்தில் சிக்கி 54 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 67 பேர் காயமடைந்துள்ளதாகவும் சுகாதாரத் துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்திற்குக் காரணமான மருத்துவமனை டீன் சஸ்பெண்டு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.  எனினும் மருத்துவமனை கட்டிடத்தில் கொரோனா நோயாளிகள் சிலர் இன்னும் சிக்கியுள்ளனர் எனக் கூறப்படுகிறது.  அவர்களை மீட்கும் பணிகளும் நடந்து வருகின்றன.  இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

;