இந்தியா - பாகிஸ்தான் மோதலில் அணிசேரா கொள்கை
இலங்கை அறிவிப்பு
கொழும்பு, மே 8 - இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான மோதலை கவனித்து வருகிறது. இந்தியப் பெருங்கடலில் ஏற்படும் புவியியல் - அரசியல் மோதல்களில் இலங்கை தலையிடாது என்றும் இலங்கை அமைச்சரவை செய்தித்தொடர்பாளர் நலிந்த ஜயதிச தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே உருவாகி வரும் போர்ச் சூழல் குறித்து எங்கள் வெளியுறவுத்துறை எச்சரிக்கையாக உள்ளது மற்றும் அது தொடர்பான தகவல்களை அரசுக்கு தொடர்ந்து கொடுத்து வருகிறது.
பயங்கரவாதத்தை நாங்கள் ஏற்கவும் மாட்டோம்; ஆதரிக்கவும் மாட்டோம்
நாங்கள் எங்களது இறையாண்மையைப் பாதுகாக்கும் வகையில் அணி சேராக் கொள்கையில் செயல்படுகிறோம். எந்தவொரு வகையான பயங்கரவாதத்தையும் நாங்கள் ஒருபோதும் ஏற்கவும் மாட்டோம்; ஆதரிக்கவும் மாட்டோம். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் முயற்சிக்கு எந்த நேரத்திலும் நாங்கள் ஆதரவு தர தயாராக உள்ளோம்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிராந்திய பாதுகாப்பு, அமைதி மற்றும் பொதுப் பாதுகாப்பே முக்கியமானவை. நாங்கள் அந்த நோக்கத்திற்காகவே பணியாற்றுவோம். வளர்ந்து வரும் சூழ்நிலைக்கு ஏற்ப இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த விஷயத்தில் எங்கள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளியிடும் என்றும் அவர் கூடுதலாகக் குறிப்பிட்டுள்ளார்.