திருவனந்தபுரம், அக். 10- “தெருவில் துப்பாக்கிச் சூடு தொடர்கிறது, வெளியே வந்தால் உயிர் போய் விடும், பயணிகள் துரத்தப் பட்டு கொல்லப்படுகிறார்கள், காணா மல் போனவர்களின் எண்ணிக்கை யும் அவர்களின் நிலையும் தெரிய வில்லை’’ -- போர் ஏற்படுத்திய நெருக்க டியை பயத்தின் உச்சநிலையை விவ ரிக்கிறார் மினு ஜெய்சன். கோட்டயம் ஏடுமானூரைச் சேர்ந்த மினு, தெற்கு இஸ்ரேலில் உள்ள பெர்ஷேவில் செவிலியராக உள்ளார். சனியன்று (அக்.7) பிற்பகல் 2 மணி முதல் பெர்ஷேவ் மீது ஷெல் தாக்குதல் இல்லை. காசா எல்லையில் மிகப்பெரிய பாதுகாப்புச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இங்குதான் பெரிய தாக்குதல் நடக்கிறது என்றும் மினு கூறியுள்ளார். பெர்ஷேவில் சுமார் ஐம்பது மலையாளிகள் உள்ளனர். ஒவ்வொருவரின் வீட்டிலும் பாது காப்பான அறைகள் உள்ளன. அடிக்கடி தாக்குதல்கள் நடப்ப தால், சூழ்நிலைக்கு ஏற்ப அனைவரும் பாதுகாப்பாக இருக்க கற்றுக் கொண்ட னர். ஷெல் எந்தத் திசையிலிருந்து வருகிறதோ, அந்தத் திசையிலிருந்து சைரன் சத்தம் கேட்கும். இதைக் கேட்டவுடனேயே பாதுகாப்பு அறை க்கு சென்றுவிட வேண்டும் என்பது விதி. இதை கண்டிப்பாக கடைப்பிடித் தால் பாதுகாப்பாக இருக்கலாம். சில பழைய வீடுகளில் பாதுகாப்பு அறைகள் இல்லை. இங்கு இருப்ப வர்களுக்கு பொது பதுங்கு குழிகள் உள்ளன. அது எங்குள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். போர் ஏற்பட்டால், பதுங்கு குழிகள் திறந்தே வைக்கப்படும். சைரன் சத்தம் கேட்டால் இங்கு மக்கள் வந்து விடு வார்கள் என்றார் மினு. வேலை மற்றும் படிப்பு நோக்கங்க ளுக்காக இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளில் ஏழாயிரம் மலையாளிகள் உள்ளனர். இதில் 500 பேர் மட்டுமே நோர்கா ரூட்ஸில் பதிவு செய்துள்ள னர். காசாவில் 10 மலையாளிகள் உள்ளனர், அங்கு மோதல் வெடித்துள் ளது. 2021ஆம் ஆண்டு நடந்த மோத லின் போது, இடுக்கி கீரித்தோட்டைச் சேர்ந்த சௌமியா சந்தோஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.