ரமல்லாக், செப்.24- ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தின் பொது விவா தத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்ச மின் நேதன்யாகு வெறுப்புணர்வை தூண்டும் வகையில் ஆத்திர மூட்டும் உரை நிகழ்த்தினார். இந்த உரை யை பாலஸ்தீன அரசு கண்டித்ததோடு நிராகரிப்பதாகவும் அறிக்கையில் தெரி வித்துள்ளது. பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமை, அமைதியான வாழ்க்கை உட்பட அனைத்தையும் மறுக்கும் இஸ்ரேல் அரசின் காலனித்துவ நடவடிக்கைகளான சட்ட விரோத ஆக்கிரமிப்புகளை நியாயப்படு த்திய பெஞ்சமின், ஐ.நா சபையில் பாலஸ் தீனத்தை வன்முறை நாடாக சித்தரித்தார். இதை வன்மையாகக் கண்டித்துள்ள பாலஸ்தீன வெளியிட்டுள்ள அமைச்சகம், இனவெறியோடு பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் இழிவுபடுத்துவதையும், அவர் களது சொந்த நிலத்தில் அவர்களை வாழ விடாமல் கொடுமை செய்து வருவதை யும் சர்வதேச சமூகம் உறுதியாககண்டித்து தடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு ள்ளது. பல ஆண்டுகளாக சர்வதேச சமூகத்தை அவமதித்து ஐக்கிய நாடுகளின் சாசனம், மனித உரிமை கள் சட்டம் உட்பட சர்வதேச சட்டங் களை கடுமையாக மீறி பாலஸ் தீனத்தில் ஆக்கிரமிப்பு மற்றும் அழிப்பு நடவடிக்கைகளில் இஸ்ரேல் ஈடுபட்டுவருகிறது. தற்போது இஸ்ரேல் தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பு மற்றும் நிறவெறி ஆட்சியைப் பற்றி பெருமை பேச உலகின் மேடையில் நிற்கிறது என்றும் பாலஸ்தீன வெளியுறவு அமைச்சகம் கடும் விமர்சனங்களை முன்வைத்ததோடு, ஆக்கிரமிப்பிற்கு இஸ்ரேல் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. இந்த குற்றச்செயல்களை ஒருபோதும் சாதாரணமாகக் கடக்க கூடாது என்றும், இஸ்ரேல் தனது அனைத்து மனித உரிமை மீறல்களுக்கும் பொறுப்பேற்க வேண்டிய நேரம் இது; மனித குலத்துக்கும் பாலஸ் தீன மக்களுக்கும் எதிரான போர்க்குற்றங் களுக்கான விளைவுகளைச் சந்திக்க வேண்டி ய நேரம் இது எனவும் தெரிவித்துள்ளது.