இஸ்ரேல் - ஹமாஸ் இயக்கம் இடையேயான போரில் பாலஸ்தீனத்துக்குட்பட்ட காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர் வான்வழித் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இதனால் காசா பகுதியில் குழந்தைகள், பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், திங்களன்று இந்தியாவுக்கான பாலஸ்தீன தூதர் முகமது ஜாபர் அபு அல்-ஹைஜாவை இடதுசாரிக் கட்சிகள், காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேரில் சந்தித்து பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் கொடுத்தனர்.