world

காசா மீது இஸ்ரேல் போர்: சில முக்கிய கள நிகழ்வுகள்

Hஅக்டோபர் 7ம் தேதி வரை இஸ்ரேல் குண்டு வீச்சில் பாலஸ்தீனர்கள் 17,177 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் 46,000 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் மருத்துவத்துறை அறிவித்துள்ளது.
Hகாசா பகுதியில் 97சதவீதம் மக்கள் உணவு பற்றாக்குறையினால் அவதிப்படுகின்றனர் என ஐ.நா. அறிவித்துள்ளது.
Hமுஸ்லீம்களின் மூன்றாவது புனிதத்தலமான அல்-அக்ஸா மசூதியை நோக்கி நூற்றுக்கணக்கான யூத மத வெறியர்கள் “மசூதியை தகர்ப்போம். யூத கோவிலை கட்டுவோம். அனைத்து அரேபியர்களுக்கும் மரணம்” என முழக்கமிட்டவாறு பேரணி சென்றனர்.  இதனால் ஜெருசலேமில் பதற்றம் உருவானது. இஸ்ரேல் காவல்துறையினர் அந்த பேரணியை தடுத்து நிறுத்தினர். 
Hகடி ஐசன்காட் எனும் இஸ்ரேலிய போர்க்கால அமைச்சரவையில் உள்ள அமைச்சரின் மகன் ஹமாசுக்கு எதிரான போரில் காசாவில் கொல்லப்பட்டார். 
Hஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர போர் நிறுத்தத்துக்கு தீர்மானம் இயற்ற வேண்டும் என ஐக்கிய அரபு அமீரகம் வலியுறுத்தியுள்ளது. தீர்மானம் நிறைவேற்ற அமெரிக்கா அனுமதிக்குமா? அப்படியே நிறை
வேறினாலும் இஸ்ரேல் ஏற்றுக்கொள்ளுமா?
Hமுகம்மது அப்பாஸ் தலைமையிலான “பாலஸ்தீன நிர்வாக அமைப்புதான்” பாலஸ்தீனத்தின் அரசியல் அதிகாரத்தில் இருக்க தகுதி படைத்த அமைப்பு என வெள்ளை மாளிகை அதிகாரி கூறியுள்ளார். ஆனால் இந்த அமைப்பு பாலஸ்தீன மக்களின் நம்பிக்கையை இழந்து வெகு நாட்களாகிவிட்டது. மக்கள் விரும்பாத ஆனால் தனக்கு வேண்டியவர்களை ஆட்சியில் திணிப்பதுதான் அமெரிக்காவின் நீண்ட கால பணி.
Hஇஸ்ரேல் குண்டு வீச்சில் பல பாலஸ்தீன ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இப்பொழுது ராய்டர்ஸ் நிறுவனத்தின் செய்தியாளர் இஸ்ஸாம் என்பவரும் கொல்லப்பட்டுள்ளார். இதற்கு ராய்டர்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது எப்படி நிகழ்ந்தது என்பதை விசாரிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளது.
Hஅமெரிக்காவின் 200வது விமானம் ஆயுதங்களை ஏந்தி இஸ்ரேல் வந்தடைந்துள்ளது என இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. அமெரிக்கா பாலஸ்தீன மக்களின் படுகொலையை தடுக்க முயல்கிறது என்றால் எவராவது நம்ப முடியுமா?
Hசவூதி அரேபியா- இஸ்ரேல் பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டும் என தாங்கள் ஆழமாக திட்டமிடுவதாக அமெரிக்கா கூறியுள்ளது. இதனை சவூதியும் விரும்புகிறது எனில் அரேபிய தேசங்கள் மீது பாலஸ்தீன மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்?
Hஇஸ்ரேலிய சட்டத்தின் கீழ் கல் வீசும் பாலஸ்தீன குழந்தைக்கு 20 ஆண்டுகள் வரை தண்டனை உண்டு எனும் கொடூர விதி உள்ளதாக மோன்செஃப் கானே எனும் பத்திரிகையாளர் வெளிப்படுத்தியுள்ளார்.
Hஐ.நா. சபை பாதுகாப்பு கவுன்சிலில் இஸ்ரேல்-ரகத்தின் தீர்மானத்துக்கு எதிராக மீண்டும் அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியது. 15 உறுப்பினர்களில் 13 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாகவும் பிரிட்டன் நடு நிலையும் வகித்தன. அமெரிக்காவின் இரட்டை முகம்!
Hஇஸ்ரேல் – பாலஸ்தீன போர் நீடிப்பது என்பது ஜோர்டானில் அரசியல் கொந்தளிப்பை உருவாக்கி வருகிறது என எமிலி பதாரின் எனும் பத்திரிகையாளர் கூறுகிறார். ஜோர்டானையும் அகண்ட இஸ்ரேலின் பகுதியாக சியோனிஸ்டுகள் முன்வைப்பது நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளது.
Hசமீபத்தில் அரபு அமீரகத்தில் நடந்த சூழலியல் பாதுகாப்பு மாநாட்டில் தாங்கள் இஸ்ரேலுக்கு எதிரான விமர்சனம்/ இனப்படுகொலை/ இனவேறுபாடு ஆகியவார்த்தைகளை கூட பயன்படுத்துவதில் தடுக்கப்பட்டோம் என அந்த மாநாட்டில் பங்கேற்ற பலரும் கூறியுள்ளனர். பாலஸ்தீன பண்பாட்டு உடையான கெஃபியா அணிவதும் தடை செய்யப்பட்டது என அவர்கள் கூறினர். 
Hஇஸ்ரேல் குறித்து தனது நிலைபாடை அமெரிக்கா மாற்றினாலொழிய இஸ்ரேல் தனது கொலைவெறியை நிறுத்தாது என முன்னாள் இஸ்ரேல் பேச்சுவார்த்தை நிபுணர் டேனியல் லெவி கூறியுள்ளார்.
Hபோர் நிறுத்தம் அறிவிக்கப்படாவிட்டால் பாலஸ்தீன காசா மக்கள் எகிப்துக்குள் புகுத்தப்படுவது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிடும் என ஐ.நா. எச்சரித்துள்ளது. இன அகற்றம் எனும் இதுவே இஸ்ரேலின் நோக்கம் என்பது வெள்ளிடை மலை!
Hஹமாசை ஒழிப்பது எனும் இஸ்ரேலின் கூற்று வெறும் பிரச்சாரம் நோக்கம் கொண்டது எனவும் உண்மையான நோக்கம் பாலஸ்தீன இனம் என்பதையே அழிப்பதுதான் எனவும் அரசியல் ஆய்வாளர் ஜான் மர்ஃபி கூறி
யுள்ளார். ஜெர்மானிய நாஜிக்கள் கூட இந்த அளவுக்கு போரில் தொடர்பில்லாத அப்பாவி மக்களை கொன்றது இல்லை எனவும் அவர் கூறினார்.
Hகடந்த 24 மணி நேரத்தில் பாலஸ்தீனர்கள் 350 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் மரண எண்ணிக்கை 18,000ஐ நெருங்குகிறது எனவும் காசா நிர்வாகம் அறி
வித்துள்ளது.
Hமனித நாகரிகத்தின் கூறுகள்  அனைத்தும் உடைந்துநொறுங்கும் நிலை காசாவில் நிலவுகிறது என உலக சுகாதார நிறுவனத்தின் கிறிஸ்டியன் லிண்ட்மைர் கூறியுள்ளார். நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லும் வழியில் மக்கள் தண்ணீர் கேட்டு கதறுகின்றனர் எனவும் உணவுக்காக யாசகம் கேட்கும் கொடூர நிலை உள்ளது எனவும் அவர் கூறினார். 
    - அ.அன்வர் உசேன்H