காசா,அக்.27- இஸ்ரேல் ராணுவத்தின் தொடர் குண்டு வீச்சால் காசா பகுதிகளில் லட்சக்கணக்கான கட்டடங்கள் தரைமட்டமாக்கியுள்ளன.இந்த கட்டட இடிபாடுகளில் ஆயிரத்திற்கும் மேலான நபர்களின் மீட்கப்படாத உடல்கள் உள்ளன என்று ஐ.நா சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. வடக்கு காசா பகுதிக்குள் மனிதாபிமான உதவிகளை கொண்டு செல்லவிடாமல் இஸ்ரேல் ராணுவம் எதிர்த்து வருகிறது என பாலஸ்தீனத்திற்கான ஐநா மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் லின் ஹேஸ்டிங்ஸ் தெரிவித்துள்ளார்.
போர் துவங்கிய இரு வாரங்களுக்கு மேலாக உணவு, குடிநீர்,மருந்து எரிபொருள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் இஸ்ரேல் ராணுவம் காசாவிற்கு செல்லவிடாமல் தடுத்து வந்தது.இந்நிலையில் சர்வதேச அளவில் எழுந்துவந்து கண்டனங்களுக்கு பிறகு மிகக் குறைந்த அளவிலான உதவிப் பொருட்களை இஸ்ரேல் அனுமதித்து வரு கிறது. எனினும் மருத்துவ மனைகள் இயங்கத் தேவை யான எரிபொருட்களை தடுத்து வருகிறது.
இந்நிலையில் இஸ்ரே லின் குண்டு வீச்சில் முற்றிலும் அழிந்து போன வடக்கு காசா பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளையும் தற்போது எதிர்க்கிறது என்றும் “அவற்றையும் மீறி உயிர்காக்கும் உதவியை நாங்கள் கொண்டு செல்ல தீர்மானித்தால், எங்கள் ஊழியர்கள் மிக மோசமான அபாயகரமான சூழலை எதிகொள்ள வேண்டியிருக்கும்” என்றும் ஹேஸ்டிங்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த குண்டுவீச்சில் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளில் 1,000 க்கும் மேற்பட்ட உடல்கள் இன்னும் மீட்கப்படாமல் இருப்ப தாகவும், அவர்களின் பெயர்ப் பட்டியல் இன்னும் இறந்தவர்களின் பட்டியலில் சேர்க்கப்படவில்லையென்றும் ஐ.நா சுகாதார நிறுவனம் அறிக்கைகளில் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் அக்டோபர் 7 முதல் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஐநா ஊழியர்கள் 57 நபர்கள் இஸ்ரேலின் குண்டு வீச்சில் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.