காசாவில் கடும் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், புதனன்று ஒரு மருத்துவமனை மீது குண்டுவீசி தகர்த்துள்ளது. அதற்குள் இருந்த 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பலி எண்ணிக்கை ஆயிரம் பேரைத் தாண்டும் என அஞ்சப்படுகிறது.
இந்த உலகம் இப்போதேனும் விழித்துக்கொள்ள வேண்டும். இஸ்ரேல் நடத்திவரும் இந்தக் கொடிய தாக்குதலை ஒரு கிரிமினல் யுத்தம் என்று அறிவிக்க வேண்டும். இஸ்ரேலின் போர்க்குற்றங்கள் தொடர்பாக அந்நாட்டின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பத்து நாட்களுக்கும் மேலாகத் தொடரும் இஸ்ரேலின் இந்தக் கொடிய தாக்குதலுக்கு எதிராக, காசா மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக, பாலஸ்தீன மக்களுக்கு முழுமையான ஆதரவைத் தெரிவிக்கும் விதமாக நாடு முழுவதும் இடதுசாரிக் கட்சிகளின் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்