பெய்ஜிங், நவ. 21 - பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் கொடூர யுத்தத்தை எதிர்த்த, அரபு நாடுகளுடன் இணை ந்து சீனா முயற்சி மேற்கொண்டுள் ளது. அரபு மற்றும் இஸ்லாமிய நாடு களின் வெளியுறவு அமைச்சர்கள் அடங்கிய கூட்டுக் குழுவினர், கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை களில் சீன வெளியுறவுத்துறை அமை ச்சர் வாங் யி-வை சந்தித்தனர். அப்போது அவர்கள் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரை நிறுத்துவது குறித்து வாங் யி-வுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சவூதி அரேபியாவின் வெளி யுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் அல் சவுத், ஜோர்டான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான அய்மன் சபாடி, எகிப்து வெளியுறவு அமைச்சர் சமே ஷோக்ரி, இந்தோனேசிய வெளியுறவு அமைச்சர் ரெட்னோ மர்சூடி, பாலஸ்தீன வெளியுறவு அமைச்சர் (மேற்கு கரை) ரியாத் அல்-மலிகி மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச் செயலாளர் ஹூசைன் பிரஹிம் தாஹா ஆகியோர் குழுவில் இடம் பெற்றிருந்தனர். பேச்சுவார்த்தைக்குப் பின் பேசிய குழுவினர், பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நடத்திவரும் போரில் நீதியை நிலைநாட்டுவதில் சீனா அதிக பங்காற்றும் என நாங்கள் நம்புகிறோம் என நம்பிக்கை தெரிவித்தனர். “காசாவில் மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்படுவதை தடுக்க வேண்டும் என்றும் உடனடி போர் நிறுத்தம் மற்றும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும்,
காசா விற்கு மனிதாபிமான உதவிகளை முழுமையாக வழங்குவதற்கும், அப்பாவி பாலஸ்தீனக் குடி மக்களைப் பாதுகாப்பதற்கும், பொறுப்பான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் விரைவில் எடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்ட இந்தக் குழுவினர், அந்த வகையில், பாலஸ்தீன -இஸ்ரேல் போரை முடிவுக்குக் கொண்டு வந்து பிரச்சனையைத் தீர்ப்பதிலும், சமத்துவம் மற்றும் நீதியை நிலைநாட்டுவதிலும் சீனா அதிகப் பங்காற்றும் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தனர். முன்னதாக கூட்டுக்குழுவின ருடன் நடத்திய உரையாடலின் போது, அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் நல்ல நண்பனாகவும் சகோதரனாகவும் சீனா விளங்கி வருகிறது என குறிப்பிட்ட வாங்-யி, இந்த போரில் நியாயம் மற்றும் நீதியின் பக்கம் சீனா உறுதியாக நிற்கிறது என்றும் குடிமக்களின் பாதுகாப்பு, மனிதாபிமான உதவி களை அதிகப்படுத்துவது, மனிதாபி மான பேரழிவுகளைத் தடுப்பது மற்றும் பாலஸ்தீனப் பிரச்சனைக்கு கொடுக்கப்பட்ட ஆரம்பத்தீர்வான இரு நாடு கொள்கையை அமல்படுத்துவது ஆகியவற்றின் தேவை குறித்தும் சீனாவின் நிலையை தெளிவுபடுத்தினார். பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வரவும், மனி தாபிமான நெருக்கடியைத் தணிக்க வும், பணயக்கைதிகளை விடுவிக்க வும், பாலஸ்தீனப் பிரச்சனைக்கு விரைவான, விரிவான, நியாய மான மற்றும் நீடித்த தீர்வை ஏற்ப டுத்தவும் அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளுடன் இடைவிடாத முயற்சிகளை மேற்கொள்ள சீனா தயாராக உள்ளதாகவும் குழுவினரிடம் உறுதியளித்துள்ளார். இந்த சந்திப்பின் மூலம், அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள், சீனா வுடன் நெருக்கமான ஒருங்கி ணைப்பையும், சர்வதேச அளவில் அதிகரித்துவரும் நெருக்கடியை தடுப்பது; அமைதிப் பேச்சு வார்த்தைக்கான செயல்முறையை மீண் டும் தொடங்குவது, இரு நாடுகள் என்ற தீர்வின் அடிப்படையில் ஒரு சுதந்திர பாலஸ்தீன அரசு உருவாவதற்கான சூழலை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆகியவற்றை சீனாவிடம் எதிர்பார்க்கின்றன என தெரிய வந் துள்ளது. இது சர்வதேச அரசியலில் அமெ ரிக்காவின் ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு ஆக்கப்பூர்வ அணிச் சேர்க்கையாக இருக் கும் என்று பார்க்கப்படுகிறது. அதற்கேற்பவே, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மற்றும் ஐ.நா. பொதுச்சபை யின் பாலஸ்தீன தொடர்புடைய தீர்மா னங்களை முழுமையாக நடைமுறைப் படுத்துவது அவசியம் என்றும், உடனடி யாக போரை முடிவுக்குக் கொண்டுவரு வது அவசியம் என்றும் சர்வதேச சட் டத்தை, குறிப்பாக சர்வதேச மனிதாபி மான சட்டத்தை தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ வலியுறுத்தியுள்ளார். பாலஸ்தீனத்தின் எதிர்காலம் தொடர்பான எந்தவொரு முடிவுக்கும் பாலஸ்தீன மக்களின் சம்மதத்தைப் பெற வேண்டும் என்றும் பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் நியாயமான கவலைகளை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் காசா வின் நிலைமை குறித்து மேலும் அர்த்த முள்ள நடவடிக்கைகளை எடுக்க பாது காப்புக் கவுன்சிலில் சீனா தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என்றும் அழுத்த மாக குறிப்பிட்டுள்ளார்.