world

உடனடியாக போரை நிறுத்துங்கள்

நியூயார்க், அக். 25 - பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர்ந்து 19-ஆவது நாளாக குண்டுவீசி கொடூரத் தாக்குதலை நடத்தி வருகிறது. குடிநீர், மின் சாரம், உணவு செல்லும் வழி களை அடைத்ததுடன், மருத்துவ மனைகளையும் கூட குறிவைத்து இஸ்ரேல் தாக்கி அழித்து வரு கிறது. தொடரும் பயங்கரம் காசா பகுதியில் 2704 குழந்தை கள், 1584  பெண்கள் உள்பட 6546 பேர்களை இஸ்ரேல் கொன்று குவித்துள்ளது. செவ்வாய்க் கிழமை மட்டும் 350 குழந்தைகள் உட்பட 704 பேரைக் கொன்றது. 17 ஆயிரத்து 439 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.  இஸ்ரேலின் மனிதாபிமான மற்ற தாக்குதலால், காசாவில் உள்ள 10 லட்சம் குழந்தைகளின் உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.  50 ஆயிரம் கர்ப்பிணி பெண்களுக்கு போதுமான மருத்துவ வசதிகள் கிடைக்கவில்லை” என்று குழ ந்தைகள் பாதுகாப்பு அமைப்பு வேதனை தெரிவித்துள்ளது. ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணு ஆயுதத்திற்கு இணையாக 12 ஆயிரம் டன் வெடி பொருட் களை பாலஸ்தீனத்திற்கு எதி ராக இஸ்ரேல் பயன்படுத்தி இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இந்தப் பின்னணியிலேயே, போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று  இஸ்ரேல் மற்றும் ஹமாஸிற்கு, ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் அந்தோ னியா குட்டரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐ.நாவில் உரை

ஐநா பொதுச்செயலாளர் அந் தோனியா குட்டரெஸ் செவ்வாய்க் கிழமை ஐநா சபையில் ஆற்றிய உரையின் பகுதிகள் வருமாறு: மத்திய கிழக்கு நாடுகளில் நிலைமை ஒவ்வொரு மணிநேர மும் மோசமாகி வருகிறது.காசா வில் ஏற்பட்டுள்ள போர், பிராந்தி யம் முழுவதும் பரவும் அபாயம் உள்ளது. பாலஸ்தீன சமூகங் களை மேலும் பிரிப்பது அங்கு நிலைமையை கொதிநிலைக்கு கொண்டு சென்று  அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.  வேண்டுமென்றே கொலை செய்வது, பாதிப்பை ஏற்படுத்து வது  மற்றும் பொதுமக்களைக் கடத்துவது அல்லது பொது மக்கள் இலக்குகளை நோக்கி   ராக்கெட்டுகளை ஏவுதல் ஆகிய எதையும் நியாயப்படுத்த முடி யாது. அனைத்து பணயக்கைதி களும் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட வேண்டும். அவர் களை உடனடியாக  நிபந்தனை கள் இல்லாமல் விடுவிக்க வேண்டும். 

ஹமாஸின் தாக்குதல்கள் காரணமற்றது அல்ல 

ஹமாஸின் தாக்குதல்கள் காரணமின்றி  நடக்கவில்லை என் பதை அங்கீகரிக்க வேண்டியது முக்கியம். பாலஸ்தீன மக்கள் 56  ஆண்டுகளாக மிக மோசமான ஆக்கிரமிப்புக்கு ஆளாகியுள்ள னர். அவர்கள் தங்கள் நிலம் ஆக்கிரமிப்பாளர்களால்  தொட ர்ந்து ஆக்கிரமிக்கப்படுவதையும் வன்முறையால் பாதிக்கப் பட்டதையும் எதிர்கொண்டிருக் கிறார்கள் ; அவர்களின் பொருளா தாரம் முடக்கப்பட்டது; அவர்க ளின் மக்கள் இடம் பெயர்ந்தனர்; அவர்களின் வீடுகள் இடிக்கப் பட்டன. அவர்களின் அவலநிலை க்கு அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற அவர்களின் நம்பிக்கை மறைந்து வருகிறது. இதற்காக ஹமாஸின் பயங் கர  தாக்குதல்களை நியாயப் படுத்த முடியாது. அந்த பயங்கர மான தாக்குதல்கள் மூலம் பாலஸ் தீன மக்களின்  மீதான  தண்டனை யையும் நியாயப்படுத்த முடியாது.

போர் விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்

அனைத்து நாடுகளும்  சர்வ தேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் தங்கள் கடமைகளை நிலை நிறுத்தி மதிக்க வேண்டும். பொது மக்களைக் காப்பாற்ற  ராணுவ நட வடிக்கைகளை  கவனமாக கை யாள வேண்டும். இன்று 6 லட்சத் திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர் களுக்கு அடைக்கலம் அளிக்கும் மருத்துவமனைகளை மதிக்க வும் பாதுகாக்கவும் வேண்டும். காசா மீதான இஸ்ரேல்  ராணு வத்தின்  இடைவிடாத குண்டு வீச்சால், அவர்களின் வாழ்விட மும் அழிந்து அதிகளவிலான பொதுமக்கள் உயிரிழந்துள்ள னர். இந்த அழிவு   தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது மிகவும் ஆபத்தானது. 

ஐநா அதிகாரிகளுக்கு இரங்கல் 

ஐக்கிய நாடுகளின் நிவாரண  மற்றும் பணிகள் நிறுவனத்தில்  பணிபுரிந்து வந்த ஐநா அதி காரிகள் 35 பேர் இஸ்ரேல் ராணு வத் தாக்குதலில் கொல்லப் பட்டுள்ள நிலையில், அவர்களு க்கு  இரங்கல் செலுத்திய ஐநா பொது செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ், ‘கெடுவாய்ப்பாக கடந்த இரண்டு வாரங்களில்  குண்டுவீச்சில் 35 ஐநா அதி காரிகள் கொல்லப்பட்டனர்’ என  வருத்தம் தெரிவித்தார். “இதுபோன்ற பல கொலை களுக்கும் நான் கண்டனம் தெரிவிக்க கடமைப்பட்டிருக் கிறேன். எந்தவொரு போரிலும் பொதுமக்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது. பொதுமக் களைப் பாதுகாப்பது என்பது  அவர்களை மனிதக் கேடயங் களாகப் பயன்படுத்தக் கூடாது என்பதையும் உள்ளடக்கியது தான்’’ என்றார்.

பொதுமக்களின் மீது குண்டு வீசுவது ‘பாதுகாப்பு’ அல்ல 

“குடிமக்களைப் பாதுகாப்பது என்பது, தங்குமிடம், உணவு,  தண்ணீர், மருந்து, எரிபொருள் எதுவும் இல்லாத காசாவின் தெற்கு நோக்கி  10 லட்சத்திற் கும் அதிகமான மக்களை வெளி யேறுமாறு கட்டளையிடுவதும், அவர்கள் செல்லும்போது தொடர்ந்து அங்கேயே குண்டு களை வீசுவதும் அல்ல” என இஸ்ரேலின் போர்க்குற்றத்தை மையப்படுத்தி பேசினார். “எரிபொருள் இல்லாமல், உதவி வழங்க முடியாது, மருத்து வமனைகளுக்கு மின்சாரம் இரு க்காது, குடிநீரை சுத்திகரிக்கவோ அல்லது உறிஞ்சி எடுக்கவோ முடியாது. காசாவின் மக்கள் தொகை தேவைகளுக்கு ஏற்ற வகையில் தொடர்ச்சியான உதவி கள் தேவைப்படுகின்றன. அந்த உதவிகள் தடையின்றி வழங்கப் பட வேண்டும் என்பதையும் வலி யுறுத்தினார். “இந்த துன்பங்களை முடி வுக்கு கொண்டு வரவும், உதவி களை எளிதாக பாதுகாப்பாக  வழ ங்கவும், பணயக் கைதிகளை விடு விக்கவும், உடனடியாக மனிதாபி மான போர் நிறுத்தத்திற்கான எனது வேண்டுகோளை மீண்டும் வலியுறுத்துகிறேன்” என்றார் அவர். “நாடுகளுக்கு இடையே யான அணிசேர்க்கை மற்றும் மனிதாபிமானமற்ற தன்மை ஆகியவை பெரும் விளைவுகளை தூண்டி வருகின்றன. இந்நிலையில் நாம் யூத எதிர்ப்பு, முஸ்லிம் மக்களுக்கு எதிரான மதவெறி மற்றும் அனைத்து வகையான வெறுப்பு சக்திகளுக்கும் எதிராக நிற்க வேண்டும்” என்றும் கூறினார்.