சமீபத்தில் அமெரிக்க மக்களின் நிர்பந்தம் காரணமாக இஸ்ரேலை அமெரிக்க ஜானதிபதி பைடன் விமர்சித் தார். இதற்கு பதிலளிக்கும்விதமாக சர்வதேச ஆதரவு இருந்தாலும்இல்லாவிட்டாலும் பாலஸ்தீனம் மீதான போர் தொடரும் என இஸ்ரேல் இறுமாப்புடன் அறிவித் துள்ளது. ஆயுதங்களை நிறுத்தாமல் அமெரிக்கா என்ன செய்தாலும்இஸ்ரேல் கவலைப்படப் போவது இல்லை.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர் முடிந்த பிறகு காசா பகுதியில் முகமது அப்பாஸ் தலைமையிலான “பாலஸ்தீன நிர்வாக அமைப்பு” நிர்வகிக்க வேண்டும் என அமெரிக்கா கூறுகிறது. இதனை நேதன்யாகு நிராகரித்து விட்டார். காசா வின் நிர்வாகம் இஸ்ரேலின் கைகளில் இருக்க வேண்டும் என்பதே நேதன்யாகுவின் திட்டம். மறுபுறத்தில் தாங்கள் இல்லாத எந்த நிர்வாகமும் காசாவில் நடக்கும் என்பது பகற் கனவு எனவும் கானல் நீர் எனவும் ஹமாஸ் கூறியுள் ளது. சமீபத்தில் காசாவில் நடந்த கருத்துக் கணிப்பில் 90சத வீதத்திற்கும் அதிகமானோர் ஹமாசை ஆதரிக்கின்றனர் எனவும் அப்பாஸ் பதவி விலக வேண்டும் எனவும் பாலஸ்தீன மக்கள் கூறியுள்ளனர் என்பதும் வெளிப்பட்டுள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு அலோசகர் ஜேக் சல்லிவன்சவூதி அரேபியா சென்று முகம்மது-பின்-சல்மானை சந்திந்துள்ளார். செங்கடலில் செல்லும் இஸ்ரேலிய கப்பல்களை ஹவுதி அமைப்பினர் தாக்குவதை எப்படி தடுப்பது என ஆலோசித்ததாக பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. இதுவரை 4 இஸ்ரேலிய கப்பல்களை ஹவுதி அமைப்பினர் பறிமுதல் செய்துள்ளனர்.
காசாவில் இதுவரை சுமார் 200 மசூதிகள்இஸ்ரேலின் குண்டு வீச்சில் அழிக்கப்பட்டுள்ளன. அனைத்து மசூதிக ளும் அழிந்தால் பிரார்த்தனை எப்படி நடக்கும் எனும் பத்திரிகையாளர் கேள்விக்கு அந்தோணியஸ்ஹானானியா எனும் பேராயர் நானே தொழுகைக்கு அழைப்பு விடுத்து எங்களது தேவாலயங்களில் பிரார்த்தனைக்கு தொழுகை ஏற்பாடு செய்யப்படும் என கூறியுள்ளார். சியோனிசம் எனும் யூத மதவெறி முறியடிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.