கடந்த 7 ஆண்டுகளில் ஐந்து முறை இஸ்ரேலின் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. 2015-ல் இருந்து நடைபெற்ற தேர்தல்களில், 2022 நவம்பர் 1-ல் நடைபெற்ற கியுள்ளன. 2018 இறுதியில் பெஞ்சமின் நேதன்யாகு தலைமையிலான அரசு பெரும்பான்மை இழந்தது. 2019 ஏப்ரல் முதல் நடைபெற்ற தேர்தல்களில் எந்த கட்சிக்கோ, கூட்டணிக்கோ பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. 2019 செப்டம்பர், 2020 மார்ச், 2021 மார்ச்சில் தேர்தல்கள் நடைபெற்றன. 2021 ஜூன் மாதம் வழக்கத்திற்கு மாறாக தீவிர வலதுசாரிகளும் நடுநிலையாளர்கள் அல்லது மிதவாதிகள் மற்றும் அரபு முஸ்லீம் கட்சியினர் பத்தாண்டுக்குப் பிறகு கூட்டணி அமைத்து நேதன்யாகுவை தோற்கடித்தனர். கூட்டணியில் அரபு முஸ்லீம் கட்சி இடம் பெற்றது, பாலஸ்தீனிய மக்களிடையே, நாம் மரியாதையாக நடத்தப்படுவோம் என்ற நம்பிக்கை- எதிர்பார்ப்பை உருவாக்கியது. ஆனால் பென்னட் ராபிட் கூட்டணி அரசு நேதன்யாகு பின்பற்றிய பாலஸ்தீன விரோத கொள்கைகளையே பின்பற்றியது.
2022 நவம்பர் 1-ல் நடைபெற்ற தேர்தலில், பெஞ்சமின் நேதன்யாகுவால் தலைமை தாங்கப்படும் தீவிர வலதுசாரி கூட்டணி மீண்டும் பெரும்பான்மை பெற்றுள்ளது. 120 உறுப்பினர் கொண்ட நாடாளுமன்றத்தில் 65 இடங்கள் நேதன்யாகு கூட்டணிக்கு கிடைத்துள்ளது. அப்பட்டமான நிறவெறி கொண்ட பாலஸ்தீன எதிர்ப்பு யூத தாயக இயக்கம் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக, புதிய அரசியல் அங்கமாக இடம்பெறுகிறது. தற்போதைய பிரதமர் ராபிட் தலைமையிலான கூட்டணிக்கு 50 இடங்கள் கிடைத்தது. இடதுசாரி கட்சி ஏற்கனவே இருந்த ஆறு இடங்களையும் இழந்துள்ளது. யூத தாயக இயக்க கட்சிக்கு ஏற்கனவே இருந்த ஏழு இடங்களுடன் மேலும் ஏழு இடங்கள் கூடுதலாக கிடைத்தது. பாசிச வளர்ச்சி மற்றும் இஸ்ரேலிய அரசியலில் தீவிர நிறவெறி கொள்கைகள் தலைதூக்கி வருகின்றன. இஸ்ரேலிய நீதித்துறையும் காவல்துறையும் தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும் எனவும் நேதன்யாகு மீதான ஊழல் வழக்குகள் வாபஸ் பெறப்பட வேண்டும் எனவும் யூத தாயக இயக்கம் கூறி வருகிறது.
1948 இல் பாலஸ்தீன பகுதிகளை ஆக்கிரமித்து இஸ்ரேல் உதயமானது. இந்த ஆக்கிரமிப்பு பகுதிகளில் தொடர்ந்து பாலஸ்தீனிய மக்கள் பல்வேறு சித்ரவதைகளை அனுபவித்து வருகிறார்கள். 2021-ல் காசா பகுதியில் நேதன்யாகு குண்டு வீச்சு நடத்தினார். 2005-06 லிருந்து 2022 மிக மோசமான ஆண்டு. 2022-ல் இதுவரை ஏராளமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். பாலஸ்தீனியர் தொழுகை நடத்தும் அல் அக்சா மசூதி தாக்கப்பட்டது. அக்கலே என்ற அமெரிக்க பிரஜையான பத்திரிகையாளர் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். பாலஸ்தீனியர்கள் பல இடையூறுகளுக்கு மத்தியில் பணியிடங்களுக்கு செல்ல நேரிடுகிறது. கொரோனா காலத்தில் சரியான சிகிச்சை பெற முடியவில்லை. பத்தாயிரக்கணக்கான பாலஸ்தீனியர் வாழும் ஜெனீன் நகரை இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். இஸ்ரேலின் அடாவடி நடவடிக்கைகளுக்கு எதிராக, பாலஸ்தீனியர் தொடர்ச்சியாக வீரத்துடன் போராடி வருகின்றனர். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு அராஜக நிறவெறி செயல்களுக்கு அமெரிக்க அரசின் ஆதரவு டிரம்ப் ஆட்சியிலும், பைடன் ஆட்சியிலும் தொடர்ந்து உள்ளது. தற்போது தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலம் பெற்றுள்ள நேதன்யாகு தலைமையிலான கூட்டணி பிற்போக்கான பயங்கரவாத நிறவெறி செயல்களில் ஈடுபடும் அரசாகத்தான் இருக்கும். பாலஸ்தீனிய மக்களுக்கு சர்வதேச ஜனநாயக இயக்கங்களின் ஆதரவு மேலும் கூடுதலாக தேவை.