world

img

மேற்குக்கரையில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்

தான் ஆக்கிரமித்து வைத்துள்ள பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில், ஒரு சிறுவன் உட்பட 6 பாலஸ்தீனி யர்களை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது. ஜெனின் நகரில் 5 நபர்களும், யாத்மா என்ற கிராமத்தில் ஒருவரும் கொலை செய்யப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜெனின் நகரில் மருத்துவமனைகள் மற்றும் ரெட் கிரசண்ட் அமைப்பின் தலைமையகத்தையும் சுற்றிவளைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.