world

img

“புதிய மேற்கு ஆசியா” உருவாகிறது?

டமாஸ்கஸ், ஏப்ரல் 5- பிற அரபு நாடுகளுடன் இணைந்து செயல்படு வதற்கான சிரியாவின் பல்வேறு செயல்பாடு களால் பதற்றமடைந்துள்ள இஸ்ரேல், பல்வேறு தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது. பல ஆண்டுகளாக சிரியாவுக்கும், பல்வேறு அரபு நாடுகளுக்கும் இடையில் மோதல் நிலவி  வருகிறது. அண்மைக்காலத்தில் சில நாடு களுக்கும், சிரியாவுக்கு இடையில் நல்ல உறவு உருவாகியுள்ளது. இந்தப் புதிய சூழலை இஸ்ரேலில் இருந்து வெளியாகும் மாரிவ் என்ற  நாளிதழ் “புதிய மேற்கு ஆசியா(புதிய மத்திய கிழக்கு)” என்று வர்ணித்திருக்கிறது. இது குறித்து  அந்த நாளிதழ் வெளியிட்டுள்ள செய்திக் கட்டு ரையில், இஸ்ரேல் பெரும் பதற்றத்துடனும், கவலையுடனும் இருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. அடுத்த அரபு லீக்கின் உச்சி மாநாடு சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் நடை பெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல் அஸ்ஸாத்துக்கு சவூதி அரேபியா அழைப்பு விடப்  போகிறது. இது மேற்கு ஆசிய வரலாற்றில் முக்கிய மான நிகழ்வுப் போக்காக இருக்கும் என்றும், இப்பகுதியில் உள்ள நாடுகள் சிரியா குறித்த அணுகுமுறையை மாற்றிக் கொண்டுள்ளன என்றும் ரஷ்யாவின் ஆர்.டி. செய்திக்குழுமம் வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கிறது.

அந்நிய சக்திகளின் உதவியுடன் தீவிரவாதி கள் சிரியாவில் செல்வாக்கு செலுத்துத் தொடங்கினர். எதிர்க்கட்சிகள் மீது கடுமையான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டதாக சிரிய அரசு மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனால் நவம்பர் 2011ல் அரபு லீக்கில் இருந்து சிரியாவை  நீக்கினார்கள். 1945 ஆம் ஆண்டில் அரபு லீக் உரு வாகியபோது, அதைத் துவக்கிய ஆறு நாடு களில் ஒன்றாக சிரியா இருந்தது. தற்போது 22 நாடு கள் இந்த அமைப்பில் உள்ளன. தனது நீக்கம் சட்டவிரோதமானது என்றும், அமைப்பின் சாசனத்திற்கு எதிரானது என்றும் சிரிய அரசு கூறிவந்தது. இந்நிலையில், சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல் அஸ்ஸாத்தை உச்சி மாநாட்டில் பங்கேற்க  வருமாறு சவூதி அரேபியா அழைக்கும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. எகிப்து தலைநகர கெய்ரோதான் அரபு லீக்கின் தலைமை யகத்தைக் கொண்டுள்ளது. அண்மையில் சிரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஃபைசல் மேக்தாத் எகிப்து பயணம் மேற்கொண்டார். அந்த பயணத்தின்போது எகிப்து வெளியுறவுத்துறை அமைச்சசர் மற்றும் உயர் அதிகாரிகளை அவர் சந்தித்து, அரபு லீக்கிற்கு சிரியா திரும்புவது பற்றி அவர் விவாதித்திருக்கிறார். 

பத்தாண்டுகளுக்குன் பிறகு எகிப்து நடந்துள்ள இந்தப் பயணத்தின்போது, சர்வதேச நிலைமைகள் பற்றியும் விவாதித்திருக்கிறார்கள். சிரியாவுடன், சர்வதேசப் பிரச்சனைகள் குறித்து எகிப்து பேசும் என்று சில மாதங்களுக்கு முன்பாக யாராவது சொல்லியிருந்தால் அரபு நாடுகளில் கேலிக்கு உள்ளாகியிருப்பார்கள் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். புதிய உறவுகள் மலர்வதோடு, அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுச் சதியும் தகர்ந்துவிடும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.

சீனாவின் முயற்சிகள்

ஒட்டுமொத்த மேற்கு ஆசியாவில் உருவாகி  வரும் புதிய நிலைமைகளுக்கு சீனாவின் முயற்சி கள் முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. சவூதி அரேபியாவுக்கும், ஈரானுக்கு இடையிலான உறவை மீண்டும் மலரச் செய்ததற்கு சீனாவின் முயற்சிகளே காரணமாக இருந்திருக்கிறது. இந்த உறவு மலர்ந்தபிறகுதான் பல்வேறு நாடு களும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கின. துருக்கியும், சிரியாவுடன் பேசிக்  கொண்டிருக்கிறது. மார்ச் நிறைவில் சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸ்ஸாத், ஐக்கிய அரபு  அமீரகத்திற்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டார். இந்த நிகழ்வுகளையே “புதிய  மேற்கு ஆசியா” உருவாகிறது என்று ஊட கங்கள் வர்ணித்து வருகின்றன.