டெல் அவிவ், மார்ச் 3- இஸ்ரேலில் வலதுசாரிக் கொள்கைகளை மிகவும் தீவிரமாக ஆளும் கூட்டணி நடை முறைப்படுத்த முயல்வதால் விரைவில் பொரு ளாதார நிலை மோசமாகிவிடும் என்று அந்நாட்டின் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்திருக்கிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்ரேலிய வல்லுநர்கள், தங்கள் நாட்டின் பொரு ளாதார நிலை குறித்து பெரும் கவலை தெரிவித்துள்ளனர். நாட்டின் பொருளாதாரம் சரிவை நோக்கிச் செல்கிறது என்று ஏற்கனவே தங்கள் கணிப்புகளில் இவர்கள் கூறியிருந் தார்கள். தற்போது ஆட்சியில் அமர்ந்துள்ள வலதுசாரிக் கூட்டணி, மிகவும் தீவிரமாக நாசகரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதால், எதிர்பார்த்ததை விட வலுவாக மற்றும் வேகமாக சரிவடையும் என்று அவர்கள் கருத்து சொல்லியிருக்கிறார்கள். இது குறித்து அவர்கள் எழுதியுள்ள இரண்டாவது கடிதத்தில், “எங்கள் முதல் கடிதத்தில் நாங்கள் சில அம்சங்களைக் குறிப் பிட்டிருந்தோம். அவை பொருளாதாரத்தை சேதப்படுத்தும் என்பது எங்கள் கணிப்பா கும். ஆனால் தற்போது எழுந்துள்ள
அறிகுறி கள் அந்த சேதத்தை வலுவாகவும், விரைவு படுத்துவதாகவும் உள்ளன. தற்காலிகமாக சந்தைகள் நிலைப்படுத்தப்பட்டாலும், எந்த நாடு களில் எல்லாம் நீதித்துறை மற்றும் நிதித்துறை அமைப்புகள் சேதப்படுத்தப்படுகின்றனவோ, அங்குள்ள அனுபவங்கள் நமக்கு எதிர்மறை யான விளைவுகளையே காட்டுகின்றன” என்று கூறியுள்ளனர். மேலும் தங்கள் கடிதத்தில், “நீண்ட காலத்திற்கான விளைவுகள் என்று பார்க்கையில் நமக்கு சேதம் அதிகமாக இருக்கப் போகிறது. ஆனால், இன்னும் காலம் கடந்துவிடவில்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்தக் கடிதத்தில் வலதுசாரி மற்றும் இடதுசாரி ஆகிய இரண்டு தரப்பு பொருளாதார வல்லுநர்களும் கையெழுத்திட்டுள்ளனர். அதிதீவிர வலதுசாரிக் கொள்கைகள் கடைப்பிடிக்கப்படுவதாக வலது சாரிப் பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். தற்போதைய ஆட்சியாளர்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் எகுத் பாரக் கோரியுள்ளார். தங்கள் முதல் கடிதத்தில், அதி தீவிர வலதுசாரிக் கொள்கைகள் இஸ்ரேலின் நவீன தொழில்நுட்பத்துறையைப் பாதிக்கும் என்றும், அந்தத் துறைக்கான முதலீடுகள் குறைந்துவிடும் என்று எச்சரித்திருந்தார்கள். மூளைத் திறமை யுள்ளவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லத் துவங்கி விடுவார்கள் என்று அவர்கள் கருதினர். இந்தக் கடிதத்தில் நோபல் பரிசை வென்ற டேனியல் காஹ்னிமேன், முன்னாள் தேசிய பொரு ளாதார ஆலோசகர் யூஜின் கான்டெல் மற்றும் இஸ்ரேல் வங்கியில் இரண்டு முறை ஆளுநராக இருந்த ஜேக்கப் பிரான்கெல் உள்ளிட்டோர் இந்தக் கடிதங்களில் கையெழுத்திட்டிருக் கிறார்கள்.
மக்கள் எதிர்ப்பு அதி தீவிர வலதுசாரிக் கொள்கைகளுக்கு எதிராக இஸ்ரேலிய மக்கள் கிளர்ந்து எழுந்துள்ளனர். தலைநகர் டெல் அவிவில் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் பங்கேற்றிருக்கிறார்கள். மேலும் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று, ஆயிரக்கணக்கான மக்கள் அவற்றில் கலந்து கொண்டனர். நீதித்துறையில் சீர்திருத்தம் என்ற பெயரில் அத்துறையைப் பலவீனப்படுத்தும் முயற்சிகளுக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்த முயற்சி நாட்டின் மதிப்பைக் குலைத்து விடும் என்று பல்வேறு ஆய்வு நிறுவனங்களும் கருத்து தெரிவித்துள்ளன. விலைவாசி உயர்வைத் தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக கடந்த இரண்டு மாதங்களாகவே போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன. நீதித்துறை சீர்குலைவுக்கு எதிரான குரல்களால் போராட்டங்கள் வலுப் பெற்றுள்ளன. கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசிப் போராட்டத்தைக் குலைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. சட்டத்துறை வல்லுநர்களும் மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தொழிற்சங்கங்கள் மேலும் வலுவான போராட்டங்களுக்குத் தயாராகி வருகின்றன.