இஸ்ரேலின் தாக்குதலால் காசா பகுதியில் நிலைமை விவரிக்க முடி யாத வகையில் உள்ளது. மேலும் மருத்துவமனைகளை கட்டாயப் படுத்தி மூடுவது நூற்றுக்கணக்கான நோயாளிகளின் உயிரை ஆபத்தில் தள்ளும் என உலக சுகாதார அமைப் பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியஸ் எச்சரித்துள்ளார்.
ஜெனீவாவில் நடந்த ஒரு செய்தி யாளர் சந்திப்பில் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர், காசா மற்றும் அதன் வடக்கு பகுதி யில் இருபத்தி மூன்று மருத்துவ மனைகளை காலி செய்ய இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு கட்டா யப்படுத்தி வெளியேற்றப்படும் நூற் றுக்கணக்கான நோயாளிகளின் உயிர் ஆபத்தான சூழ்நிலைக்கு தள்ளப்படு கிறது என்று கூறிய அவர், படுகா யமடைந்த மற்றும் நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்ட ஆயிரக்கணக் கான மக்களுக்கு உதவுவதற்காக இஸ்ரேல்-ஹமாஸ் போர் மனிதா பிமான அடிப்படையில் இடை நிறுத்தம் செய்ய வேண்டுமென அழைப்பு விடுத்தார்.
10 ஆயிரம் பேர் பலி
மேலும் இஸ்ரேலில் 1,400 பேர் உட்பட, காஸாவில் 8,500க்கும் மேற் பட்டோர் என 10,000க்கும் மேற் பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். முக்கியமாக இரு தரப்பிலும் பெண் கள் மற்றும் குழந்தைகள் கொலை யாகியுள்ளனர்.
21,000 க்கும் அதிகமானோர் படு காயமடைந்துள்ளதோடு 14 லட்சம் பாலஸ்தீனர்கள் காசாவில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலை யில் பலருக்கு நீண்ட கால கவனிப்பு தேவைப்படுவதாகவும் அந்த செய்தியாளர் சந்திப்பில் அதனோம் கூறினார்.
நிரம்பி வழியும் பிணவறைகள்
இஸ்ரேலின் பெயரை குறிப்பிடா மல் “காசாவில் நடந்துவரும் பயங்க ரத்தை விவரிக்க எங்களிடம் வார்த்தை கள் இல்லை” மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக் கை நிரம்பி வழிகிறது. பிணவறை கள் நிரம்பி வழிகின்றன மற்றும் மருத் துவர்கள் மயக்க மருந்து இல்லாம லேயே அறுவை சிகிச்சை செய்யும் கொடுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குடும்பங்கள் தங்குமிடம் மற்றும் கழிப்பறைகள் நிரம்பி வழிகின்றன, இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உருவாகி உள்ளது என்றார்.