காசா, நவ.14- மின்சாரத் தட்டுப்பாடு, எரி பொருள், மருந்துகள் ,ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக குழந்தை கள் நோயாளிகள், படுகாயமடைந் தவர்களை காப்பாற்ற முடியாமல் காசா மருத்துவமனைகள் இஸ் ரேல் ராணுவத்தால் கல்லறைக ளாக மாற்றப்பட்டு வருகின்றன. எரி பொருள் தட்டுப்பாடு காரணமாக இன்குபேட்டரில் வைக்கப்பட்டி ருந்த பிறந்த குழந்தைகள் உயிரி ழந்து விட்டன.
காசாவில் உள்ள மிக பெரிய மருத்துவமனையான அல்-ஷிபா, அல்-குத்ஸ் ஆகியவை எரிபொ ருள், மருந்துகள் இல்லாமல் முடக்கப்பட்டு விட்டன. அல்-ஷிபா மருத்துவமனையை சுற்றி இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. இதனால் அல்-ஷிபா மருத்துவமனையில் சிக்கியுள்ள சுமார் 1,500 க்கும் மேற் பட்ட நோயாளிகள் மற்றும் மருத்து வப் பணியாளர்கள், பாதுகாப்பிற் காக தஞ்சம் புகுந்துள்ள 7,000க்கும் அதிகமான மக்கள் மருத்துவ மனை வளாகத்திற்குள் சிக்கி இருப்பதாக காசா மருத்துவமனை களின் இயக்குநர் முகமது ஜாகவுட் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் பற்றாக்குறை யால் நவம்பர் 15 முதல் உதவி நட வடிக்கைகளை நிறுத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு விட்டதாக பாலஸ்தீன ஐநா அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எரிபொருட்கள் இல்லாததால் ட்ரக்குகள் மூலம் ரஃபா எல்லை வழியாக பாலஸ்தீனர்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை, உதவிகளை பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என பாலஸ்தீன ஐநா அகதிகள் நிறுவன தலை வர் தாமஸ் ஒயிட், எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் சேமிப்பில் இருந்த எரிபொருள் தீர்ந்துவிட்டது எனவும் குறிப் பிட்டுள்ளார்.
மேலும் படுகாயமடைந்தவர் களை ரஃபா எல்லை வழியாக எகிப்து கொண்டு செல்வதும், உண விற்கான பிரட் உற்பத்தி செய்ய மாவு உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்வதிலும் தேக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது.
அல்-ஷிபா மருத்துவமனை யை சுற்றி இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டவர்களின் உடல் கள் சிதறி கிடக்கின்றன. அவற்றை புதைக்கவோ பிணவறைக்கு எடுத்துச் செல்லவோ முடியாத சூழல் உள்ளது என்றும் அம் மருத்துவமனை முற்றிலுமாக முடங்கி ஒரு கல்லறையாக மாறி விட்டது என்றும் உலக சுகாதார நிறுவன செய்தி தொடர்பாளர் தெரி வித்துள்ளார்.
ஆனால் மருத்துவ ஊழியர் கள் மற்றும் நோயாளிகள் அல்- ஷிபா மருத்துவமனையை விட்டு வெளியேற அனுமதிக்க தயாராக இருப்பதாக இஸ்ரேல் கூறியுள் ளது. இந்நிலையில், மருத்துவ மனையில் இருந்து வெளியேற முயன்ற மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தி யது என பாலஸ்தீன மக்கள் தெரி வித்துள்ளனர்.