world

img

இஸ்ரேலில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி  

இஸ்ரேலில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  

இஸ்ரேல் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள டெல் அவிவ் நகரில் பினெய் ப்ராக் எனும் பகுதியில் நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கி ஏந்தியபடி பொதுமக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்.  

இந்த தாக்குதலில் 5 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதையடுத்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.    

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை சுட்டுக்கொன்றனர். மேலும்  துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பாலஸ்தீன நாட்டின் மேற்கு கரையைச் சேர்ந்தவர் என அந்நாட்டின் உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அதனைதொடர்ந்து எதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்து காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை.    

இஸ்ரேலில் கடந்த ஒரு வாரத்தில் நடைபெற்ற மூன்றாவது தாக்குதல் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

;